பாரீஸ் தாக்குதலுக்காக ஈபிள் டவரும் அஞ்சலி செலுத்துகிறது!
பாரீஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்த தீவிரவாத வெறியாட்டத்தை தொடர்ந்து, அந்த நாட்டிலுள்ள புகழ் பெற்ற ஈபிள் டவரின் விளக்குகள் மங்கல் ஒளியில் ஒளிரவிடப்பட்டன.
இந்திய நேரப்படி இன்று அதிகாலை, பாரீசில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
Eiffel Tower's lights go out in memory of those killed in #Paris #ParisAttacks #PrayForPairs pic.twitter.com/LHBeJ8jiAL
— Rajesh Khilare (@Cricrajeshpk) November 14, 2015 இதையடுத்து பிரான்சிலுள்ள புகழ்பெற்ற 300 மீட்டர் உயர ஈபிள் டவரில் உள்ள விளக்குகள் மங்கலாக்கப்பட்டுள்ளன. இதை பார்க்கும்போது ஈபிள் டவரே சோகத்தில் மூழ்கி நிற்பதை போன்ற தோற்றம் உருவாகிறது.
வழக்கமாக நீலம், வெள்ளை மற்றும் சிவப்பு வண்ண விளக்குகளால் ஈபிள் டவர் அலங்கரிக்கப்பட்டிருக்கும். அது தற்போது டிம் செய்யப்பட்டு, உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் காணப்படுகிறது.












Click it and Unblock the Notifications