For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இங்கிலாந்தில் மோடிக்கு எதிராக போராட்டம் நடத்தும் பட்டேல் சமூகத்தார்

By Siva
Google Oneindia Tamil News

லண்டன்: பிரதமர் நரேந்திர மோடி லண்டன் வருகையில் அவருக்கு எதிராக போராட்டம் நடத்த இங்கிலாந்தில் உள்ள பட்டேல் சமூகத்தார் அரசிடம் அனுமதி கோரியுள்ளனர்.

இட ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து குஜராத்தில் பட்டேல் சமூகத்தினர் ஹர்திக் பட்டேல் தலைமையில் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி லண்டன் வருகையில் அவருக்கு எதிராக போராட்டம் நடத்த இங்கிலாந்தில் வசிக்கும் பட்டேல் சமூகத்தார் அரசிடம் அனுமதி கோரியுள்ளனர்.

Patels to protest against Modi in Britain

இது குறித்து வருண் பட்டேல் என்பவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

மோடிக்கு எதிராக போராட்டம் நடத்த அனுமதி அளிக்கக் கோரி நாங்கள் இங்கிலாந்து பிரதமர் டேவிட் காமரூனுக்கு கடிதம் எழுதியுள்ளோம். குஜராத்தில் தான் எங்களின் உரிமைக்காக போராட விடாமல் தடுக்கிறார்கள் இங்காவது அனுமதி அளியுங்கள் என்று கேட்டுள்ளோம்.

பேரணிகள் நடத்த அரசியல் கட்சிகளுக்கு குஜராத் அரசு அனுமதி அளிக்கிறது. ஆனால் பட்டேல் சமூகத்தார் குஜராத்தில் எந்த நிகழ்ச்சி நடத்தவும் அரசு அனுமதிப்பது இல்லை என்றார்.

மோடி அடுத்த வாரம் இங்கிலாந்து செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Patel community people living in England has sought permission to hold pretest against PM Modi when he visits London next week.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X