அமெரிக்க ராணுவ தலைமையகம் பென்டகனில் இந்திய அதிரடிப்படை பிரிவு அமைப்பு!
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்: இந்தியாவுடனான பாதுகாப்பு உறவை வலுப்படுத்தவும், அதிநவீன பாதுகாப்புக் கருவிகளை இணைந்து தயாரிக்கும் நடவடிக்கையை விரைவுபடுத்தவும் சிறப்புப் பிரிவை அமெரிக்க ராணுவ அமைப்பான பென்டகன் உருவாக்கியுள்ளது.

பென்டகன் அமைப்பின் தலைமைப் பொறுப்பை பாதுகாப்புத் துறை செயலர் அஷ்டன் கார்டர் ஏற்றப் பிறகு, "இந்திய அதிரடி படைப் பிரிவு' என்று புதியப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் பிரிவுக்கு, அமெரிக்கப் பாதுகாப்புத் துறையின் சர்வதேச ஒத்துழைப்பு அலுலவலக அதிகாரி கெய்த் வெப்ஸ்டர் பொறுப்பு வகிக்கிறார்.
மேலும், பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஏழு பேர் இந்தப் பிரிவில் பணியாற்றி வருகின்றனர். பென்டகன் வளாகத்தில் வேறொரு நாட்டுக்கான பிரிவு அமைந்துள்ளது இதுவே முதல்முறையாகும்.












Click it and Unblock the Notifications