தேர்தல் செலவுக்கு என் கிட்னியை விற்க அனுமதியுங்க... எலெக்சன் கமிஷனை அதிரவைத்த வேட்பாளர்
போபால்: தேர்தல் செலவுக்கு தன் கிட்டினியை விற்க அனுமதிக்க வேண்டும் என மத்திய பிரதேசத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள லாஞ்சி தொகுதி எம்எல்ஏ கிஷோர் சம்ரிட்டே. இவர் சமாஜ்வாதி கட்சி சார்பில் அந்த மாநிலத்தில் உள்ள பாலாகாட் மக்களவை தொகுதியில் வேட்பாளராக போட்டியிட
சுயேட்சை வேட்பாளராக களம் இறங்கும் கிஷோர் சம்ரிட்டே தேர்தல் ஆணையத்திடம் வித்தியாசமான கோரிக்கை மனுவினை அளித்துள்ளார்.
அந்த மனுவில், ரூ.75 லட்சம் வரை தேர்தலில் செலவு செய்யலாம் என கட்டுப்பாடு வைத்துள்ளீர்கள். ஆனால் அந்த அளவுக்கு செலவு செய்ய என்னால் முடியாது. எனவே தேர்தல் செலவுக்கு எனது கிட்னியை விற்க அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
"கர்ர்ர்ர்ர்...தூ.. கஸ்தூரி உண்மையில் யாரைக் காரி துப்பியிருக்கிறார்?.. புது டிவீட்டால் பரபரப்பு!
முன்னதாக எம்எல்ஏ தேர்தலில் போட்டியிட்ட போது, கிஷோர் சம்ரிட்டே ஒருவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கைது செய்யப்பட்டார். ஆனால் சிறையில் இருந்த படியே அவர் போட்டியிட்டு எம்எல்ஏவாக வெற்றி பெற்றார்.