ஆர்எஸ்எஸ்சை தீவிரவாத இயக்கமாக அறிவிக்க கோரி அமெரிக்க கோர்ட்டில் மனு!
நியூயார்க்: இந்தியாவில் செயல்படும், ஆர்எஸ்எஸ் அமைப்பை தீவிரவாத இயக்கமாக அறிவிக்க வேண்டும் என்று கோரி சீக்கிய அமைப்பு ஒன்று அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
சீக்கியர்களுக்கான நீதி (எஸ்எப்ஜே) என்ற அமைப்பு நியூயார்க் தெற்கு மாவட்ட கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், இந்தியாவில் செயல்படும் ஆர்எஸ்எஸ் அமைப்பை, வெளிநாட்டு தீவிரவாத அமைப்பாக அறிவிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

பாபர் மசூதி இடிப்பு, சீக்கியர்களின் பொற்கோயிலுக்குள் ராணுவ நடவடிக்கை எடுக்க தூண்டியது, 2008ல் சர்ச்சுகளை எரிந்து, கன்னியாஸ்திரிகளை மானபங்கம் செய்தது, 2002ல் குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த கலவரம் போன்றவற்றில் ஆர்எஸ்எஸ்சுக்கு தொடர்புள்ளதாக அந்த மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மேலும், தாய்மதத்திற்கு திரும்புமாறு முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களை மதமாற்றமும் செய்து வருகிறது ஆர்எஸ்எஸ் என்றும் அந்த மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. எனவே, ஆர்எஸ்எஸ் அமைப்பை, வெளிநாட்டு தீவிரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவிக்க வேண்டும் என்று அந்த மனு கோரிக்கைவிடுத்துள்ளது.
இவ்வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிமன்றம், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி, இந்த விஷயத்தில், இன்னும் 60 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று சம்மன் அனுப்பியுள்ளது.
பொற்கோவில் தாக்குதலில் சோனியாகாந்திக்கு தொடர்புள்ளதாக கூறி அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததும் இதே, சீக்கியர்களுக்கான நீதி அமைப்புதான் என்பது நினைவிருக்கலாம்.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications