ஆர்எஸ்எஸ்சை தீவிரவாத இயக்கமாக அறிவிக்க கோரி அமெரிக்க கோர்ட்டில் மனு!
நியூயார்க்: இந்தியாவில் செயல்படும், ஆர்எஸ்எஸ் அமைப்பை தீவிரவாத இயக்கமாக அறிவிக்க வேண்டும் என்று கோரி சீக்கிய அமைப்பு ஒன்று அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
சீக்கியர்களுக்கான நீதி (எஸ்எப்ஜே) என்ற அமைப்பு நியூயார்க் தெற்கு மாவட்ட கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், இந்தியாவில் செயல்படும் ஆர்எஸ்எஸ் அமைப்பை, வெளிநாட்டு தீவிரவாத அமைப்பாக அறிவிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

பாபர் மசூதி இடிப்பு, சீக்கியர்களின் பொற்கோயிலுக்குள் ராணுவ நடவடிக்கை எடுக்க தூண்டியது, 2008ல் சர்ச்சுகளை எரிந்து, கன்னியாஸ்திரிகளை மானபங்கம் செய்தது, 2002ல் குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த கலவரம் போன்றவற்றில் ஆர்எஸ்எஸ்சுக்கு தொடர்புள்ளதாக அந்த மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மேலும், தாய்மதத்திற்கு திரும்புமாறு முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களை மதமாற்றமும் செய்து வருகிறது ஆர்எஸ்எஸ் என்றும் அந்த மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. எனவே, ஆர்எஸ்எஸ் அமைப்பை, வெளிநாட்டு தீவிரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவிக்க வேண்டும் என்று அந்த மனு கோரிக்கைவிடுத்துள்ளது.
இவ்வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிமன்றம், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி, இந்த விஷயத்தில், இன்னும் 60 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று சம்மன் அனுப்பியுள்ளது.
பொற்கோவில் தாக்குதலில் சோனியாகாந்திக்கு தொடர்புள்ளதாக கூறி அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததும் இதே, சீக்கியர்களுக்கான நீதி அமைப்புதான் என்பது நினைவிருக்கலாம்.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications