ஈரான் போரால்.. எமெர்ஜென்சியை அறிவித்த ஆசிய நாடு! அடுத்து இந்தியாதான்! எச்சரிக்கும் நிபுணர்கள்
மணிலா: ஈரான் போர் காரணமாக சர்வதேச அளவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் எழுந்திருக்கிறது. குறிப்பாக ஆசிய நாடுகள்தான் உடனடியாக பாதிப்புகளை எதிர்கொள்ள தொடங்கியுள்ளன. அந்த வகையில், தற்போது பிலிப்பைன்ஸ், எமெர்ஜென்சியை அறிவித்திருக்கிறது.
நம்மை போலவே பிலிப்பைன்ஸும் எரிபொருளுக்கு இறக்குமதியைதான் அதிக அளவு நம்பியிருக்கிறது. போர், இறக்குமதியை பாதித்திருப்பதால் தற்போது எமெர்ஜென்சியை அறிவித்திருக்கிறது.

பிலிப்பைன்ஸில் என்ன நடக்கிறது?
பிலிப்பைன்ஸ் நாட்டில் பெரிய அளவுக்கு எண்ணெய் வளம் கிடையாது. எனவே 90%க்கு அதிகமான எண்ணெய் தேவைக்கு மத்திய கிழக்கு நாடுகளைதான் அது சார்ந்திருக்கிறது. குறிப்பாக சவுதி, ஐக்கிய அரபு அமீரகம், குவைத் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளிலிருந்து எண்ணெய்யை வாங்கி, தங்கள் நாட்டில் சுத்திகரிப்பு செய்து பயன்படுத்துகிறது. இதில் என்ன பிரச்சனை எனில், பிலிப்பைன்ஸில் ஒரே ஒரு சுத்திகரிப்பு நிலையம் மட்டுமே இருக்கிறது.
எரிபொருள் விலை
எனவே பெரும்பாலும், கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கு பதில், நேரடியாக பெட்ரோல், டீசலையே வாங்கி வருகிறது. இதனால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கொஞ்சம் எகிறினாலும் கூட, பிலிப்பைன்ஸில் பெட்ரோல் டீசல் விலை உச்சத்தை தொட்டுவிடும்.
தற்போது சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை, பேரலுக்கு 120 டாலரை தொட்டிருக்கிறது. இதன் காரணமாக,
- ஒரு லிட்டர் பெட்ரோல் - ரூ.157-176
- ஒரு லிட்டர் டீசல் - ரூ. 204-210
- ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் - ரூ.212
அரசு எடுத்த நடவடிக்கை
என விற்கப்படுகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் போர் காரணமாக எரிபொருள் விலை ரூ.37 அதிகரித்திருக்கிறது. எனவே நிலைமையை கண்ட்ரோல் செய்ய அந்நாட்டு அரசு எமெர்ஜென்சியை அறிவித்திருக்கிறது. இனி அரசுதான் எரிபொருளை இறக்குமதி செய்யும். விலை உயர்வை கட்டுப்படுத்த, எரிபொருளை கள்ள சந்தையில் பதுக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மானியம் அறிவிப்பு
அதேபோல, பொது போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ரூ.7,700 வரை மானியம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. சில நகரங்களில் மாணவர்களுக்கும், தொழிலளார்களுக்கும் இலவச பேருந்து சேவை ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மறுபுறம் பொருளாதார தடை விதிக்கப்பட்ட ஈரான் மற்றும் வெனிசுலாவிடமிருந்து எண்ணெய் வாங்க அமெரிக்காவிடம் பெர்மிஷன் கேட்டு வருகிறது.
இதெல்லாம் வேலைக்கு ஆகாது
ஆனால், இந்த நடவடிக்கையெல்லாம் வெறும் கண் துடைப்புதான், பிரச்சனையை சரி செய்ய உடனடியாக கலால் வரி மற்றும் வாட் வரியை ரத்து செய்ய வேண்டும் என்று அந்நாட்டின் தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன. அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக, வரும் வியாழக்கிழமை முதல் 2 நாட்கள் பொது வேலை நிறுத்தத்திற்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்திருக்கின்றன.
இந்தியாவுக்கு நெருக்கடி
பிலிப்பைன்ஸை போல, இந்தியாவிலும் எமெர்ஜென்சியை அறிவிக்க ரொம்ப நாள் ஆகாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஏனெனில், இந்தியாவும் எரிபொருளுக்கு இறக்குமதியைதான் சார்ந்திருக்கிறது. ஈரான் போர், எரிபொருள் விநியோக சங்கிலியை அடுத்த 5 ஆண்டுகளுக்கு கடுமையாக பாதிக்கும். இந்தியாவிடம் சேமிப்பு நிறைய இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் தெரிவித்திருக்கிறார். ஆனால், இவை எல்லாம் அதிகபட்சமாக 3 மாதங்களுக்கு மட்டுமே போதுமானவை.
எனவே, விரைவில் இந்தியா எரிபொருள் எமெர்ஜென்சியை அறிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
-
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
புஷ் போட்ட அதே உத்தரவு.. ராணுவ வீரர்கள் வயதை உயர்த்திய டிரம்ப்! பல லட்சம் பேரை ஈரானில் இறக்க முடிவு? -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
"நீங்க சொல்வதை எல்லாம் கேட்க முடியாது.." கண்டிஷன் போட்ட அமெரிக்கா.. திட்டவட்டமாக நிராகரித்த ஈரான்! -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
இருளில் மூழ்கும் நாடுகள்.. அதிர்ச்சி கொடுக்கும் 'எரிசக்தி அவசரநிலை'.. Energy Emergency என்றால் என்ன? -
அமெரிக்க அதிபர் டிரம்பின் ராஜதந்திரம்.. கண்டுபிடித்த ஈரான்.. அடுத்த நொடியே தலைகீழான எண்ணெய் விலை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க 20,000 கி.மீ தூரத்திலிருந்து உதவும் இந்திய நட்பு நாடு! -
அடித்து ஆடும் பாகிஸ்தான்.. ஈரான் - அமெரிக்கா போரில் சத்தமின்றி லாபம் பார்க்கும்.. இஸ்லாமாபாத்! -
மத்தியஸ்தம் என பந்தா காட்டிய பாகிஸ்தான்.. அடிக்க வேண்டிய இடத்தில் அடித்த ஈரான்.. ஷெபாஸ் ஷெரீப் ஷாக் -
ஈரான் விவகாரத்தில் பாகிஸ்தான் முடிவு என்ன? டிரம்பின் மருமகன் பயணம் ஏன் முக்கியமானது? -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
ஈரானின் உச்ச தலைவராக.. என்னை பொறுப்பேற்க சொன்னார்கள்! நான்தான் வேண்டாம் என சொல்லிட்டேன் - டிரம்ப்














Click it and Unblock the Notifications