வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு உதவுக: துபாய் இலங்கை துணை தூதர்
துபாய்: இலங்கையில் பெருமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யுமாறு துபாய் இலங்கை துணைத் தூதர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கையில் பெருமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் 200-க்கும் மேற்பட்டோர் சிக்கியிருப்பதாக அஞ்சப்படுகிறது. மேலும், அந்த நாட்டில் கடந்த 3 நாட்களாகப் பெய்து வந்த கன மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 92-ஆக உயர்ந்துள்ளது. ராணுவம் உள்ளிட்ட மீட்புக் குழுவினர் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் தீவிர மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

நிலச்சரிவு ஏற்பட்டு காலம் கடந்து வருவதால், உயிரிழப்புகளைத் தவிர்க்கும் நோக்கில் கிடைத்த பொருள்களைக் கொண்டும், வெறும் கைகளைக் கொண்டும் மீட்புக் குழுவினர் சகதிச் சரிவுகளை அள்ளி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடுமாறு துபாயில் உள்ள இலங்கை துணைத் தூதர் சரிதா யத்தகோடா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
இலங்கையில் பெருமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கிறேன். துபாய் சத்வா பகுதியில் அமைந்துள்ள இலங்கை துணைத் தூதரகத்தில் பணமாகவோ, பொருளுதவியாகவோ அல்லது எமர்ஜென்சி விளக்குகள், மடிக்கக்கூடிய படுக்கை விரிப்புகள், குளிருக்கு போர்த்த உதவும் ஆடைகள், போர்வைகள், மழை கோட்டுகள், குடை உள்ளிட்ட பொருட்களை வழங்கலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதி உதவி செய்ய விரும்புபவர்கள் கீழ் காணப்படும் வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பி வைக்கலாம்.
வங்கி கணக்கின் பெயர் - Consulate General of Sri Lanka
வங்கி கணக்கு எண் - 177508020001
ஐபிஏஎன் எண்(IBAN no.) - AE600030000177508020001
வங்கியின் பெயர் - ADCB
-
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு












Click it and Unblock the Notifications