அதிகரிக்கும் மோதல்களுக்கு நடுவே.. பிரதமர் நரேந்திர மோடி- வங்கதேச தலைவர் முகமது யூனுஸ் சந்திப்பு!
பாங்காக்: பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் பங்கேற்கப் பிரதமர் நரேந்திர மோடி தாய்லாந்து சென்றுள்ளார். இதற்கிடையே அங்கு வைத்து பிரதமர் மோடியை வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் சந்தித்துப் பேசினார். கடந்த சில காலமாகவே இந்தியா வங்கதேசம் இடையேயான உறவுகள் மோசமாகி வரும் சூழலில், இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
வங்காள விரிகுடா பகுதியை ஒட்டி அமைந்துள்ள அனைத்து நாடுகளும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டது தான் பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்னெடுப்பு அதாவது பிம்ஸ்டெக். இதில் இந்தியா, வங்கதேசம், இலங்கை, நேபாளம், பூடான், மியான்மர், தாய்லாந்து ஆகிய ஏழு நாடுகள் உள்ளன.

பிம்ஸ்டெக் உச்சி மாநாடு
இந்த கூட்டமைப்பின் 6ஆவது உச்சி மாநாடு தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெறுகிறது. அதில் பங்கேற்கத் தான் பிரதமர் நரேந்திர மோடி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிற்கு சென்றுள்ளார். பிரதமர் மோடி இந்த பயணத்தில் வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸை சந்திப்பார் எனச் சொல்லப்பட்ட நிலையில், அந்த சந்திப்பு இப்போது நடந்துள்ளது.
மோடி- முகமது யூனுஸ் சந்திப்பு
ஷேக் ஹசீனா இருந்த வரை இந்தியாவுக்கும் வங்கதேசத்திற்கும் இடையே பல ஆண்டுகளாகவே நல்லுறவே இருந்து வந்தது. ஆனால், ஷேக் ஹசீனா அரசு கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் அகற்றப்பட்ட நிலையில், அதன் பிறகு இரு நாட்டு உறவு மோசமடைந்தது. அங்குள்ள இந்துக்கள் மீதான தாக்குதல், அந்நாட்டுத் தலைவர்கள் இந்தியா குறித்துக் கூறிய தகவல்கள் நிலைமை மோசமாக்கியது. இப்படி இரு தரப்பு உறவு மோசமாகி வரும் சூழலில் இந்தச் சந்திப்பு நடந்துள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க வேண்டும் என வங்கதேச தரப்பு கேட்டுக் கொண்டதன் பெயரிலேயே இந்தச் சந்திப்பு நடந்துள்ளது. இருவரும் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தியதாகத் தெரிகிறது. நேற்று வியாழக்கிழமை இரவு பிம்ஸ்டெக் தலைவர்களின் இரவு விருந்திலும் கூட மோடியும் யூனுஸும் அருகருகே அமர்ந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
சர்ச்சை பேச்சு
மேலும், வங்கதேச இடைக்கால ஆலோசகர் முகமது யூனுஸ் சமீபத்தில் தான் சீனா சென்றிருந்தார். அப்போது அங்கு இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் நிலத்தால் சூழப்பட்டு இருப்பதாகவும் அவர்கள் கடலை அணுக வங்கதேசத்தின் உதவி தேவை என்றும் கூறியிருந்தார். அதாவது முகமது யூனுஸ்,"இந்தியாவின் கிழக்குப் பகுதியிலுள்ள ஏழு மாநிலங்கள் நிலத்தால் சூழப்பட்டுள்ளன. அவை கடலை அடைய எந்த வழியும் இல்லை. இங்கே கடலின் ஒரே பாதுகாவலர் நாங்கள்தான். எனவே இது சீனப் பொருளாதாரத்தின் நீட்டிப்பாக இருக்கலாம்" என்று சீனாவுக்கு அழைப்பு விடுக்கும் வகையில் பேசியிருந்தார்.
சீனாவுக்கு அழைப்பு
ஏற்கனவே தென்கிழக்கு சீன கடல் பகுதியில் சீனா தனது ஆதிக்கத்தை அதிகரித்து பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தச் சூழலில் வங்கதேச கடல் பகுதிக்கு முகமது யூனுஸ் தானாகச் சென்று அழைப்பு விடுத்தது பேசுபொருள் ஆனது. இது இந்தியா வங்கதேச இடையே வளர்ந்து வரும் மோதலை மேலும் அதிகரிப்பதாகவே இருந்தது.
முகமது யூனுஸின் கருத்துக்களுக்குப் பிரதமர் மோடி நேரடியாகப் பதிலளிக்கவில்லை என்றாலும், இந்தியாவின் வடகிழக்கு பகுதி பிம்ஸ்டெக் குழுவின் இதயத்தில் உள்ளதாகப் பிரதமர் மோடி கூறியது குறிப்பிடத்தக்கது.
-
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
“போர் நடந்தாலும்.. எரிபொருள் கொள்முதலில் பாதிப்பு இருக்காது”.. நாடாளுமன்றத்தில் மோடி உறுதி! -
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
ரம்ஜான் நாளில் களத்தில் இறங்கிய பிரதமர் மோடி.. மேற்காசியாவில் திரும்பும் அமைதி! உற்றுநோக்கும் உலகம்! -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு! -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம்












Click it and Unblock the Notifications