ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி.. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்பட உலக தலைவர்களுடன் கலந்துரையாடல்
பெர்லின்: ஜெர்மனியில் நடக்கும் ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க அதிபர் ஜோபைடன் உள்பட உலகின் பல நாட்டு தலைவர்களுடன் கலந்துரையாடினார்.
Recommended Video
ஜெர்மனியின் ஸ்க்லோஸ் எல்மாவ் நகரில் 2 நாள் ஜி7 மாநாடு நேற்று தொடங்கியது. நேற்று, இன்று என இந்த மாநாடு 2 நாட்கள் நடைபெறுகிறது. இதில் ஜி7 நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, கனடா, இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளன.
பொருளாதார ரீதியாக வளர்ந்து நாடுகளான இந்த நாட்டின் தலைவர்கள் ஆண்டு தோறும் உச்சிமாநாடு நடத்தி வருகின்றனர். அதன்படி இந்த ஆண்டுக்கான உச்சிமாநாடு ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது.

மோடிக்கு சிறப்பு அழைப்பு
இந்த உச்சிமாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக ஜெர்மனிக்கு சென்றார். நேற்று ஜெர்மனி பிரதமர் ஒலாப் ஸ்கால்ப் அந்நாட்டின் பாரம்பரிய முறைப்படி வரவேற்றார். மேலும் ஜெர்மனி வாழ் இந்தியர்களும் பிரதமர் நரேந்திர மோடியை உற்சாகமாக வரவேற்றனர்.

உச்சிமாநாட்டில் மோடி
ஜி7 உச்சிமாநாட்டின் 2வது நாளான இன்று பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். இவருடன் அர்ஜென்டினா, இந்தோனேஷியா, செனகல், தென்ஆப்பிரிக்கா, உக்ரைன் நாட்டு தலைவர்கள் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றனர். இன்று பிரதமர் நரேந்திர மோடியிடம் கைக்குலுக்கி ஜெர்மனி பிரதமர் ஓலாப் ஸ்கோல்ஸ் வரவேற்றார். இதேபோல் பிற நாட்டு தலைவர்களும் வரவேற்கப்பட்டனர்.

உலக தலைவர்களுடன் கலந்துரையாடல்
இதையடுத்து ஜி7 நாட்டு தலைவர்களுடன் சேர்ந்து அனைத்து தலைவர்களும் ஒன்றாக இணைந்து குழு புகைப்படம் எடுத்து கொண்டனர். அமெரிக்க அதிபர் ஜோபைடன், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரன் உள்ளிட்டவர்கள் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடினர். முன்னதாக குழு புகைப்படத்தின்போது அமெரிக்க அதிபர் ஜோபைடன் பிரதமர் நரேந்திர மோடியை நோக்கி நடந்து வந்தார். பிறகு பிரதமர் நரேந்திர மோடியின் தோளை தட்டி அழைத்தார். நரேந்திர மோடி திரும்பி பார்க்கவே கையை நீட்டி ஜோபைடன் பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்்து தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடியும் ஜோபைடனின் தோளை தட்டி வாழ்த்து தெரிவித்தார்.

குழுவாக இணைந்து செயல்பட...
இந்த மாநாட்டில் பொருளாதார வளர்ச்சி, பணவீக்கம், உணவு பொருட்களின் பற்றாக்குறை உள்பட நாடு சந்திக்கும் சவால்கள் பற்றி விரிவாக விாதிக்கப்பட்டது. மேலும், இந்த பிரச்சனையை அனைவரும் ஒன்றிணைந்து எதிர்கொள்ள வேண்டும். இந்த விஷயத்தில் அனைவரும் இணைந்து ஒரே குழுவாக செயல்பட வேண்டும் என தலைவர்கள் பேசினர். மேலும் இந்தியா-ஜெர்மனி இடையே வணிகம், எரிசக்தி ஒப்பந்தம் குறித்தும் பேசப்பட்டது. இதேபோல் பிரதமர் நரேந்திர மோடி ஜி7 நாடுகளின் தலைவர்களை சந்தித்து இருநாடுகள் இடையேயான உறவு குறித்து விவாதித்தார்.












Click it and Unblock the Notifications