ஐ.நா. மாநாட்டில் பரஸ்பரம் கையசைத்து கொண்ட பிரதமர் மோடி- பாக். பிரதமர் நவாஸ் ஷெரீப்
நியூயார்க்: ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிகாப்பு மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் இருவரும் பரபஸ்பரம் கையசைத்து மகிழ்ச்சி தெரிவித்துக் கொண்டனர்.
அமெரிக்காவுக்கு 5 நாள் பயணமாக சென்ற பிரதமர் நரேந்திர மோடி, ஐ.நா. பொதுச்சபை கூட்டம், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளுடன் சந்திப்பு, அமெரிக்கா வாழ் இந்தியர்களுடன் சந்திப்பு என பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

மேலும் அமெரிக்கா அதிபர் ஒபாமா, இங்கிலாந்து பிரதமர் கேமரூன், இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களையும் பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். அதே நேரத்தில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புடன் எந்த ஒரு சந்திப்பையும் அதிகாரப்பூர்வமாக பிரதமர் மோடி நடத்தவில்லை.
நியூயார்க்கில் இருவரும் ஒரே ஹோட்டலில் தங்கியிருந்த போதும் எந்த சந்திப்பும் நடைபெறவில்லை. இந்த நிலையில் நியூயார்க்கில் ஐ.நா. அமைதிகாப்பு மாநாடு இன்று நடைபெற்றது. இம்மாநாட்டில் அமெரிக்கா அதிபர் ஒபாமா உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டு அரங்குக்கு முதலில் பிரதமர் நரேந்திர மோடி வந்து தமக்கான இருக்கையில் அமர்ந்தார்.
அவரைத் தொடர்ந்து வந்த பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் மோடிக்கு எதிர்புறம் இருந்த இருக்கையில் அமருவதற்கு முன்னதாக மோடியைப் பார்த்து கையை அசைத்தார்.
பிரதமர் மோடியும் உட்கார்ந்தபடியே பரஸ்பரம் கையசைத்து புன்னகைத்தார்.
பிரதமர் மோடியும் நவாஸ் ஷெரீப்பும் கடந்த ஜூலை மாதம் ரஷ்யாவின் உஃபா நகரில் பிரிக்ஸ் மாநாட்டின் போதுதான் கடைசியாக நேருக்கு நேர் சந்தித்துப் பேசியிருந்தனர். அதன் பின்னரும் பாகிஸ்தான் தொடர்ந்து எல்லையில் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இரு தலைவர்களிடையே அமெரிக்காவில் எந்த ஒரு பேச்சுவார்த்தையும் நடைபெறாது என கடந்த வாரம் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
“போர் நடந்தாலும்.. எரிபொருள் கொள்முதலில் பாதிப்பு இருக்காது”.. நாடாளுமன்றத்தில் மோடி உறுதி! -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ரம்ஜான் நாளில் களத்தில் இறங்கிய பிரதமர் மோடி.. மேற்காசியாவில் திரும்பும் அமைதி! உற்றுநோக்கும் உலகம்! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி












Click it and Unblock the Notifications