வாஷிங்டனில் பிரதமர் மோடி..ஒபாமாவுடன் இன்று மதிய விருந்து !
வாஷிங்டன்: ஆப்கன், கத்தார், சுவிட்சர்லாந்து பயணத்தை முடித்த பிரதமர் நரேந்திர மோடி இன்று அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் சென்றடைந்தார். இதைத்தொடர்ந்து மோடிக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா இன்று மதிய உணவு விருந்து அளித்து கெளரவிக்கிறார்.
பிரதமர் நரேந்திரமோடி 5 நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். கத்தார் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு சுவிட்சர்லாந்து புறப்பட்டு சென்றார்.

ஜெனீவாவில் பிரதமர் மோடி சுவிட்சர்லாந்து அதிபர் ஜோகன்சினைடரை சந்தித்து பேசினார். அதன் பின்னர் சுவிட்சர்லாந்து பயணத்தை முடித்து கொண்டு அமெரிக்கா சென்றடைந்தார். விமான நிலையத்தில் திரண்டிருந்த இந்தியர்கள் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஒபாமாவை, வெள்ளை மாளிகையில் உள்ள அவரது அதிகாரப்பூர்வ அலுவலகத்தில் மோடி இன்று சந்தித்துப் பேச உள்ளார். அப்போது பருவநிலை மாற்றம் இரு நாட்டு பாதுகாப்பு, தூதரக ஒத்துழைப்பு குறித்து ஆலோசனை நடத்துகின்றனர்.
இதைத்தொடர்ந்து மோடிக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா இன்று மதிய உணவு விருந்து அளித்து கெளரவிக்கிறார். பின்னர் நாளை அமெரிக்கா நாடாளுமன்றத்தின் கூட்டு கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்ற உள்ளார்.
பிரதமர் ஆன பின்னர் மோடி அமெரிக்கா செல்வது இது நான்காம் முறை. அமெரிக்க அதிபர் ஒபாமாவை ஆறாவது முறையாக மோடி சந்திக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications