'தாய்' மொழியில் திருக்குறள் மொழி பெயர்ப்பை வெளியிட்ட மோடி.. தாய்லாந்தில் கோலாகலம்

Subscribe to Oneindia Tamil

பாங்காக்: 3 நாள் பயணமாக தாய்லாந்து சென்ற பிரதமர் நரேந்திர மோடி, 'தாய்' மொழியில், திருக்குறளை வெளியிட்டார்.

இன்று காலை டெல்லியில் இருந்து தாய்லாந்து தலைநகர் பாங்காங் சென்றார் பிரதமர் நரேந்திர மோடி. ஆசியான் மாநாடு, கிழக்காசிய மாநாடு மற்றும் கூட்டுப் பொருளாதார மாநாடு ஆகியவற்றில் மோடி பங்கேற்கிறார்.

PM Narendra Modi releases a Thai translation of Thirukkural

இதன் ஒரு அம்சமாக பாங்காக்கில் இந்திய நேரப்படி இன்று மாலை சுமார் 6.15 மணிக்கு துவங்கிய, 'SawasdeePMModi' என்ற இந்திய வம்சாவளியினருடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றாார். நிகழ்ச்சியின் துவக்கத்தில், குருநானக்கின் 550வது பிறந்தநாளையொட்டி, நினைவு நாணயம் ஒன்றையும், திருக்குறளின் 'தாய்' மொழி பெயர்ப்பையும் மோடி வெளியிட்டார்.

இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் உரையை ஆரம்பித்தபோது, நமது நாட்டின், தமிழ் உள்ளிட்ட, பல்வேறு மொழிகளிலும் மோடி வணக்கம் என்பதை தெரிவித்தார்.

நான் தாய்லாந்தில் இருக்கிறேன். ஆனால் நான் ஒரு அந்நிய தேசத்தில் இருப்பதாக உணரவில்லை. சுற்றுப்புறம், உடை, இங்குள்ள அனைத்தும் என்னை வீட்டில் இருப்பதை போல உணரவைக்கின்றன என்றும் மோடி தனது உரையில் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், நமது உறவுகள் மிகவும் வலுவடைந்துள்ளன என்று நீங்கள் எப்போதாவது நினைத்து பார்த்துள்ளீர்களா? இந்தியாவும் தாய்லாந்தும் பகிர்ந்து கொள்ளும் வலுவான பிணைப்புக்கு காரணம் என்ன? வரலாறு நம்மை ஒன்றிணைத்து நமது உறவுகளை வளர்த்துக் கொண்டுள்ளது. உங்கள் அனைவருக்கும், தீபாவளி வாழ்த்துக்கள் மற்றும் சாத் பூஜைக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு மோடி உரையாற்றினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+