குவாட் மீட்டிங் ரத்து ஆனாலும், ஆஸ்திரேலியா செல்கிறார் பிரதமர் மோடி.. உறுதி செய்த ஆஸி. பிரதமர்!
மெல்போர்ன் : சிட்னியில் வரும் மே 24ஆம் தேதி நடைபெற இருந்த குவாட் தலைவர்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டாலும், இந்திய பிரதமர் நரேந்திர மோடி அடுத்த வாரம் ஆஸ்திரேலியாவுக்கு வருவார் என்றும், அவரை வரவேற்க ஆவலுடன் இருப்பதாகவும் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தெரிவித்துள்ளார்.
இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் குவாட் அமைப்பின் உச்சி மாநாடு ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வரும் மே 24ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதில் இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் ஆகியோர் பங்கேற்று பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது ஆஸ்திரேலிய பயணத்தை ரத்து செய்துள்ளதாகவும், அவர் குவாட் மாநாட்டில் பங்கேற்க மாட்டார் என்றும் வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஜப்பானில் வரும் 19ஆம் தேதி நடைபெறும் ஜி-7 மாநாட்டில் பங்கேற்கும் ஜோ பைடன், அதன் பின் ஆஸ்திரேலியாவுக்கு செல்லாமல் அமெரிக்கா திரும்புவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் நிலவும் கடன் உச்சவரம்பு நெருக்கடி தொடர்பாக முக்கிய ஆலோசனை மேற்கொள்வதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது ஆஸ்திரேலிய பயணத்தை ரத்து செய்துள்ளார். ஜோ பைடனின் ஆஸ்திரேலிய பயணம் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து குவாட் மாநாட்டை ஆஸ்திரேலியா ரத்து செய்துள்ளது.
இது தொடர்பாக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் கூறுகையில், "சிட்னியில் அடுத்த வாரம் நடைபெற இருந்த குவாட் தலைவர்கள் கூட்டம் நடைபெறாது. அதற்கு பதிலாக ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் தலைவர்கள் ஜப்பானில் இந்த வார இறுதியில் நடைபெறும் ஜி-7 உச்சி மாநாட்டில் சந்திப்பார்கள். அந்த மாநாட்டில் நாங்கள் 4 பேரும் ஒன்றாக ஆலோசிக்க முயற்சிப்போம்." எனத் தெரிவித்தார்.

குவாட் தலைவர்கள் கூட்டத்தை ஆஸ்திரேலியா ரத்து செய்துள்ள நிலையில், இந்திய பிரதமர் மோடி சிட்னிக்கு வருவாரா அல்லது அவரது பயணமும் ரத்து செய்யப்படுமா என்ற கேள்விக்கு ஆஸ்திரேலிய பிரதமர் பதிலளித்தார். குவாட் கூட்டம் ரத்து செய்யப்பட்டாலும், அடுத்த வாரம் ஆஸ்திரேலியாவுக்கு பிரதமர் மோடி மிகவும் வரவேற்கத்தக்க விருந்தினராக வருவார் என்று தெரிவித்தார்.
"பிரதமர் மோடி அடுத்த வாரம் என்னுடன் இருதரப்பு சந்திப்புக்கு வருவார். பிரதமர் மோடி வணிக சந்திப்புகளை நடத்துவார். சிட்னியில் உள்ள ஒலிம்பிக் மைதானத்தில் ஹோம்புஷ் என்ற இடத்தில் நடைபெறும் பொது நிகழ்ச்சியில் பங்கேற்பார். பிரதமர் மோடி ஆஸ்திரேலிய - இந்திய வணிக உறவு தொடர்பான சந்திப்புகளில் ஈடுபடுவார். அவரை சிட்னிக்கு வரவேற்க நான் ஆவலாக இருக்கிறேன்" எனத் தெரிவித்தார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications