அமெரிக்க சிறையில் இருந்து தப்பியோடிய கைதியை சரண் அடைய வைத்த குளிர்
Subscribe to Oneindia Tamil
கென்டுக்கி: அமெரிக்காவில் சிறையில் இருந்து தப்பியோடிய கைதி குளிர் தாங்க முடியாமல் போலீசில் சரண் அடைந்துள்ளார்.
அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் கடுங்குளிர் நிலவி வருகிறது. இதனால் விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்
கென்டுக்கி மாநிலத்தில் உள்ள லெக்சிங்டன் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராபர்ட் விக்(42) என்ற கைதி கடந்த ஞாயிற்றுக்கிழமை தப்பியோடினார்.
அவர் தப்பிச் சென்ற மறுநாளில் இருந்து தான் கடுங்குளிராக உள்ளது. கடந்த திங்கட்கிழமை அன்று லெக்சிங்டனில் தட்பவெட்ப நிலை மைனஸ் 20 ஆக இருந்தது. வெளியே குளிரை தாங்க முடியாத அவர் ஒரு மோட்டலுக்கு சென்று அங்குள்ள ஊழியரிடம் போலீசாரை வரவழைக்குமாறு தெரிவித்தார்.
போலீசார் வந்ததும் அவர்களிடம் அவர் சரண் அடைந்தார்.












Click it and Unblock the Notifications