கெய்ரோவில் பயங்கரம்.. வெடிகுண்டை செயலிழக்க வைத்தபோது அது வெடித்து போலீஸ் அதிகாரி பலி
கெய்ரோ: எகிப்து தலைநகர் கெய்ரோவில், வெடிகுண்டு ஒன்றை செயலிழக்க வைத்தபோது அது வெடித்துச் சிதறியதில் அதில் சிக்கி வெடிகுண்டு நிபுணர் ஒரவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
எகிப்து காவல்துறையைச் சேர்ந்தவர் அந்த உயிரிழந்த வெடிகுண்டு நிபுணர். கெய்ரோவில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்திற்கு வெளியே இந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த இடத்தில் வைத்தே அதை செயலிழக்க வைக்க முடிவு செய்யப்பட்டது.

அல் ஹாரம் என்ற தெருவில் உள்ள ஒரு பூத் தொட்டியில் அந்த வெடிகுண்டை புரட்சியாளர்கள் வைத்திருந்தனர். உலகப் புகழ் பெற்ற பிரமிடுகள் அமைந்துள்ள இடத்திற்கு செல்லும் சாலையில் இந்த தெரு அமைந்துள்ளது.
இந்த வெடிகுண்டை செயலிழக்க வைப்பதர்காக ஒரு போலீஸ் வெடிகுண்டு அகற்றும் நிபுணர் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் சென்றார். பூத்தொட்டியில் இருந்த வெடிகுண்டை அகற்றும் முயற்சியில் அவர் ஈடுபட்டிருந்தபோது திடீரென பலத்த சப்தத்துடன் அந்த குண்டு வெடித்துச் சிதறியது. இதில் அந்த காவல்துறை அதிகாரி சிக்கி படுகாயமடைந்து கீழே விழுந்தார். இதனால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
சில மீட்டர் தொலைவில் வந்து அவர் விழுந்தார். இவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் எகிப்து காவல்துறை அதிர்ச்சி அடைந்துள்ளது. அஜ்னத் மிஸ்ர் என்ற ஜிஹாத் குழுதான் இந்த வெடிகுண்டை வைத்துள்ளதாக டிவிட்டர் மூலம் தெரிவித்துள்ளது. காவல்துறையினரைக் குறி வைத்து இந்தக் குண்டு வைக்கப்பட்டதாகவும் அது கூறியுள்ளது.
கடந்த 2013ம் ஆண்டு அதிபர் மொஹமத் மோர்சியை ராணுவம் ஆட்சியிலிருந்து அகற்றியது. அன்று முதலே ராணுவத்திற்கும், காவல்துறைக்கும் எதிராக புரட்சியாளர்கள் போராடி வருகின்றனர், தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இதுவரை நூற்றுக்காணக்கானோர் இதுவரை இரு தரப்பிலும் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவாகரத்து முடியாமல் 'டூயட்' பாடினால் 10 ஆண்டு சிறை? - விஜய்க்கு சிக்கலாகும் பிரிவு 69.. மாட்டுனாரு -
Sani Peyarchi: சனிப்பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளும் பெறப்போகும் பலன்கள்.. முழு விவரம் -
அமெரிக்காவை கைவிடும்.. சவுதி அரேபியா, குவைத், யு.ஏ.இ, கத்தார்.. அமெரிக்க சாம்ராஜ்யத்தின் அஸ்தமனம்? -
ஒவ்வொன்றும் ஒரு வெடி குண்டுக்கு சமம்.. சங்கீதா கையில் அந்த வீடியோ ஆதாரம்.. வசமாக சிக்கும் விஜய்! -
பல்லாவரம் ஜிஎஸ்டி சாலை ஸ்தம்பித்தது.. என்ன காரணம்.. தாம்பரம் போலீசாருக்கு பறந்த கோரிக்கை -
ஈரானை தாக்க.. இந்திய துறைமுகத்தை பயன்படுத்தியதா அமெரிக்கா? மத்திய அரசு மறுப்பு -
தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி மயிலாப்பூர் வழியாக கடற்கரைக்கு ரயில்கள்.. ரயில்வேக்கு பறந்த கோரிக்கை -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம் -
பெங்களூரில் மருமகளை சமையல் செய்ய வேண்டாம் என்ற மாமியார்.. அதுக்கு இப்படியா செய்வாங்க -
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ராஜினாமா! சிறுவயது ஆசைக்காக ராஜ்யசபா எம்பியாகிறார்.. அவரே தந்த விளக்கம் -
"இந்தியாவின் எதிரி".. அஜர்பைஜானை குறிவைத்து அடித்த ஈரான்.. தீப்பற்றி எரியும் நாடு - அதிரடி -
அது விக்கெட் இல்லமா.. வான்கடே மைதானத்தில் துள்ளிக் குதித்த சாக்ஷி.. அமைதிபடுத்தி கிண்டல் செய்த தோனி












Click it and Unblock the Notifications