மாயமான விமானத்தின் விமானி வீட்டில் மலேசிய போலீசார் சோதனை
கோலாலம்பூர்: 239 பயணிகளுடன் மாயமான விமானத்தை இயக்கிய விமானியின் வீட்டில் மலேசிய போலீசார் இன்று சோதனை நடத்தினர்.
ஒரு வாரத்துக்கு முன்பு 239 பயணிகளுடன் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் மாயமானது. இந்த விமானத்தை தேடும் நடவடிக்கையில் பல நாடுகள் ஈடுபட்டு வருகின்றன.

இருப்பினும் எந்த ஒரு உருப்படியான தகவலும் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில்தான் 239 பேருடன் பயணிகள் விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என்று விசாரணை அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
அதே நேரத்தில் விமானம் கடத்தப்பட்டதாக உறுதியான தகவல் இல்லை.. ஆனால் தகவல் தொடர்பு சாதனம் திட்டமிட்டு துண்டிக்கப்பட்டிருக்கிறது என்று மலேசிய பிரதமர் நஜீப்பும் பீதியை கிளப்பிவிட்டிருக்கிறார்.
இந்நிலையில் மாயமான விமானத்தை இயக்கிய விமானி ஜஹாஹி அகமதுவின் வீட்டில் இன்று மலேசிய போலீசார் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் விமானம் மாயமானது தொடர்பான முக்கிய ஆவணங்கள் கிடைத்ததா? என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை.












Click it and Unblock the Notifications