குலுங்கியது கொலம்பியா! சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..6.5 ஆக ரிக்டரில் பதிவு வீதிகளில் தஞ்சம் அடைந்த மக்கள்
வாஷிங்டன்: கொலம்பியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 6.5 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் கொலம்பியா தலைநகர் போகோட்டா நகரம் குலுங்கியது. வீடுகள் குலுங்கியதால் மக்கள் வீதிகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
கொலம்பியாவின் தலைநகரான பொகோட்டாவில் இன்று ஞாயிற்றுக்கிழமை பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜெர்மனியின் GFZ ஆராய்ச்சி மையம் வெளியிட்ட தகவலின்படி, இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆகப் பதிவாகியது. சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அதிகாரிகள் கூறினர்.

நிலநடுக்கத்தால் பொகோடா நகரத்தில் சைரன்கள் ஒலித்தன. அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) வெளியிட்ட தகவலின்படி, இந்த நிலநடுக்கம் பொகோடாவிலிருந்து 170 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பகுதியில், உள்ளூர் நேரப்படி காலை 9:08 மணிக்கு ஏற்பட்டது.
நிலநடுக்கத்தின் காரணமாக கட்டிடங்கள் அதிர்ந்தது. இதனால் மக்கள் பீதியடைந்தனர். உடனடியாக வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். சிலர் தங்கள் வீடுகளில் உள்ள பொருட்கள் அசைந்தது தொடர்பான வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டுள்ளனர். கொலம்பியாவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் பரவி வருகின்றன.
பொகோடாவைச் சேர்ந்த ஒரு மூதாட்டி ஒருவர் கூறுகையில், "இந்த நிலநடுக்கம் ரொம்ப பயங்கரமா இருந்தது" என்று தெரிவித்தார். மத்திய கொலம்பியாவில் அடிக்கடி நிலநடுக்கம் வரும் அபாயம் உள்ளது. இதற்கு முன்பு, 1999-ல் 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதில் சுமார் 1,200 பேர் இறந்தனர். அதே நாளில் அந்நாட்டு அதிபர் வேட்பாளர் சுடப்பட்ட சம்பவம் அம்மக்களை கவலையில் ஆழ்த்தியிருந்தது.
கொலம்பியாவில் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பிரசாரங்கள் சூடுபிடித்துள்ளன. ஜனநாயக மையக் கட்சியை சேர்ந்த அதிபர் வேட்பாளர் 'மிகுவல் உரிபே' பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருக்கிறது. தற்போது 'உரிபே' உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இந்த சம்பவம் கொலம்பியா மக்களை உலுக்கிய நிலையில், தற்போது இயற்கை பேரிடரும் மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications