பாகிஸ்தானில் உலுக்கிய நிலநடுக்கம்.. ரிக்டரில் 7.7 என பதிவு.. ஆப்கானிஸ்தான், சீனாவையும் விடவில்லை
ஆப்கானிஸ்தான் இந்துகுஷ் மலையில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதேபோல் பாகிஸ்தானின் சில நகரங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.
காபூல்: ஆப்கானிஸ்தானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் 6.5 என்ற அளவில் பதிவான இந்த நிலநடுக்கத்தால் டெல்லி, உத்தர பிரதேச மாநிலங்களில் நிலஅதிர்வு ஏற்பட்டது. இதனால் மக்கள் பீதியடைந்து வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சமீபத்தில் துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 50 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் இறந்தனர். இதன் தொடர்ச்சியாக நாட்டின் பல இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் இன்று ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் மலைபகுதியை மையமாக வைத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.5 என்ற அளவில் பதிவாகி இருந்தது. ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தால் டெல்லி உள்ளிட்ட வட இந்திய மாநிலங்கள் குலுங்கியதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

இதேபோல் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத், பெஷாவர், லாகூர் நகரங்களும் நிலநடுக்கத்தால் அதிர்ந்தன.












Click it and Unblock the Notifications