நம்பினால் நம்புங்கள்... மூன்றே நாளில் செவ்வாய்க்கு போய் விட முடியுமாம்!
வாஷிங்டன்: செவ்வாய் கிரகத்தை எட்டிப் பார்த்து, பின்னர் தொட்டுப் பார்த்து, இப்போது உள்ளேயே போய் இறங்கி விட்ட நிலையில் அடுத்து அங்கு போய்ச் சேருவதற்கஆன காலத்தைக் குறைக்கும் வழிகளை ஆய்ந்து வருகின்றனர் விஞ்ஞானிகள். தற்போது அதற்கும் ஒரு ஷார்ட் கட்டைக் கண்டுபிடித்து விட்டனர் விஞ்ஞானிகள்.
கடினமான போட்டோன்ஸ் எனப்படும் ஒளிக்கதிர்களைப் பயன்படுத்தி அதன் அடிப்படையில் இயங்கக் கூடிய ரோபோட்டிக் விண்கலம் மூலம் பூமியிலி்ருந்து மிகக்குறைந்த பயண நேரத்தில் செவ்வாய் கிரகத்தை சென்றடையும் ஆராய்ச்சியை அமெரிக்க விஞ்ஞானிகள் முடுக்கி விட்டுள்ளனர்.
செவ்வாய்கிரகம் குறித்து சர்வதேச அளவில் ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. ஏறக்குறைய பூமியின் தன்மையோடு ஒத்திருப்பதால், அங்கு மனிதர்களைக் குடியேற்றும் கனவும் விஞ்ஞானிகள் மத்தியில் உள்ளது.
இன்னும் சில ஆண்டுகளில் அங்கு சோதனை முயற்சியாக மனிதர்களைக் குடியேற்றவும் அவர்கள் திட்டமிட்டு, செயல்பட்டு வருகின்றனர்.

பயண நேரம்...
தற்போது விண்வெளி ஓடங்கள் மூலம் பூமியில் இருந்து செவ்வாய் கிரகத்தைச் சென்றடைய பயண நேரம் மாதக்கணக்கில் ஆகிறது. ஆனால் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இந்தப் பயண நேரத்தைச் சுருக்க விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

அதிவேகத்தில்...
இதற்கு விண்வெளியில் காணப்படும் போட்டோன்ஸ் எனப்படும் ஒளிக்கதிர்களை பயன்படுத்தி அதிகவேகத்தில் பாய்ந்துச் செல்லக்கூடிய போட்டோனிக் ப்ரொபுல்ஷன் (photonic propulsion) என்ற புதியவகை தொழில்நுட்பத்தை பயன்படுத்த விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.

ஆய்வு...
இது தொடர்பாக அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுகளை நடத்தி வருகின்றனர்.

3 நாட்களில்...
இந்த போட்டோன் கதிர்களை எதிர்கொள்ளும் வகையில் எதிர்ப்பு ஒளியலைகளை லேசர் தொழில்நுட்பத்தில் செயற்கையாக உருவாக்கும் திட்டம் விஞ்ஞானிகளிடத்தில் உள்ளது. அத்தகைய தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்படும் விண்வெளி ஓடங்கள் மூலம் பூமியிலிருந்து 3 தினங்களிலேயே செவ்வாய்கிரகத்தைச் சென்றடைந்து விடும் என அவர்கள் நம்புகின்றனர்.












Click it and Unblock the Notifications