கைதியுடன் 2 முறை கசமுசா... இந்திய வம்சாவளி சிறை வார்டனுக்கு 15 மாத சிறை
சுர்ரே: இங்கிலாந்தில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள பெண் கைதியுடன் உறவு வைத்துக் கொண்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சிறை வார்டர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்த நபரின் பெயர் அம்ரித்பால் அலுவாலியா. 31 வயதாகிறது. இவர் சுர்ரே மாவட்டத்தில் உள்ள பிரான்ஸ்பீல்ட் என்ற இடத்தில் உள்ள சிறையில் வார்டராக இருக்கிரார். திருமணமானவர். இவர் அதே சிறையில் அடைக்கப்பட்டுள்ள 22 வயதான கோலெட் ஓ பிளாஹெர்ட்டி என்ற கைதியுடன் 2 முறை செக்ஸ் உறவில் ஈடுபட்டுள்ளார்.
இதில் ஒருமுறை அந்தக் கைதியின் அறைக்குள்ளேயே போய் உல்லாசமாக இருந்துள்ளார். இது அதிகாரிகளுக்குத் தெரிய வரவே அலுவாலியா கைது செய்யப்பட்டார். கோர்ட் விசாரணையின்போது நடந்ததை ஒத்துக் கொண்டார் அலுவாலியா. இதையடுத்து அவருக்கு தற்போது 15 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2012ல் இருவருக்கும் இடையே மோகம் ஏற்பட்டுள்ளது. சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்ததற்காக 6 ஆண்டு தண்டனையை அந்தப் பெண் கைதி அனுபவித்து வருகிறார். அவர் சிறையில் உள்ள சலூனில் பெண் கைதிகளுக்கு முடி வெட்டும் வேலையைச் செய்து வந்தார். அப்போதுதான் இவருக்கும், அலுவாலியாவுக்கும் இடையே சந்திப்பு ஏற்பட்டு காதல் கொண்டனர்.
பின்னர் சலூனில் வைத்து முதல் முறை உறவு கொண்டனர். அதன் பின்னர் அப்பெண்ணின் அறைக்குப் போய் அலுவாலியா உறவு வைத்துக் கொண்டார்.
முதலில் செக்ஸ் வைத்துக் கொள்ள அப்பெண் தயங்கியுள்ளார். ஆனால் அலுவாலியாதான், இதில் தப்பில்லை என்று கூறி பேசிப் பேசி அவரை சம்மதிக்க வைத்தாராம்.
ஆனால் இது சிறையில் உள்ள ஜிம் அதிகாரி மூலம் வெளியில் கசிந்து போலீஸ் வரைக்கும் போய் விட்டது. மேலும், சிசிடிவி ரகசியக் கேமராவிலும் அலுவாலியா செய்த செயல் அம்பலமாகி விட்டது.
பிரான்ஸ்பீல்ட் சிறையானது தனியார் நடத்தும் சிறையாகும். இங்கு 600 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இங்கு 2009ம் ஆண்டு முதல் அலுவாலியா வேலை பார்த்து வருகிறாராம்.