வங்கியில் மோசடி! தொழில் அதிபர் மெகுல் சோக்ஷி பெல்ஜியத்தில் கைது.. இந்தியாவுக்கு கொண்டு வரப்படுவாரா?
பிரஸ்ஸல்ஸ்: பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 14 ஆயிரம் மோசடி செய்துவிட்டு நாட்டை விட்டு தப்பி ஓடிய தொழில் அதிபர் மெகுல் சோக்ஷி பெல்ஜியம் நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவின் கோரிக்கையை ஏற்று சோக்ஷி கைது செய்யப்பட்டுள்ளார். மெகுல் சோக்ஷிக்கு எதிராக இரண்டு பிடிவாரண்ட்டுளை மும்பை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
இந்தியாவின் மிகப்பெரும் தொழிலதிபர்களில் ஒருவர் மெகுல் சோக்சி. வைர வியாபாரியான இவர் மோசடி ஆவணங்கள் மூலம் பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 13,578 கோடி ரூபாயைக் கடனாகப் பெற்றார். இது தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையினர் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கின் விசாரணையின்போதே மெகுல் சோக்சி நாட்டை விட்டு வெளியேறினார். கரிபியன் நாடுகளில் ஒன்றான ஆன்டிகுவா நாட்டில் குடியுரிமை பெற்று, அங்கு தஞ்சம் அடைந்தார். இந்தியாவில் தேடப்பட்டு வரும் குற்றவாளியான மெகுல் சோக்ஷி, கடந்த மே மாதம் ஆன்டிகுவாவில் இருந்து கியூபாவுக்குத் தப்பிச் செல்ல முயன்றார். தற்போது பெல்ஜியம் நாட்டில் இருக்கும் மெகுல் சோக்சி அந்நாட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சனிக்கிழமை மெகுல் சோக்ஷி கைது செய்யப்பட்டதாகவும் தற்போது, சிறையில் அடைக்கப்பட்டு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. எனினும் தனது உடல் நிலையை காரணம் காட்டி உடனடியாக அவர் ஜாமீன் கோரலாம் என்று சொல்லப்படுகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு மருத்துவ சிகிச்சைக்காக பார்படா மற்றும் ஆண்டிகுவா நாட்டில் இருந்து வெளியேறிய மெகுல் சோக்ஷி பின்னர் எங்கு இருக்கிறார் என்ற விவரம் தெரியாமல் போனது.
பிறகு டொமினிக்கா நாட்டில் இருப்பதாக தகவல் வெளியான நிலையில், பெல்ஜியத்தில் அண்ட்வெர்ப் நகரில் தனது குடும்பத்துடன் வசித்து வருவதாக அண்மையில் தகவல் வெளியானது. மெகுல் சோக்ஷியின் மனைவி பிரீத்தி சோக்ஷி பெல்ஜியம் குடியுரிமை பெற்றவர். எனவே, பெல்ஜியம் நாட்டில் ரெசிடன்ஸி கார்டு பெற்ற மெகுல் சோக்ஷி அங்கு வசித்து வந்த நிலையில் தற்போது இந்திய விசாரணை முகமைகள் விடுத்த கோரிக்கையை ஏற்று அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மெகுல் சோக்ஷியுடன் சேர்ந்து வங்கி மோசடியில் ஈடுபட்ட நீரவ் மோடி தற்போது லண்டனில் சிறையில் உள்ளார். அவரை நாடு கடத்துவதற்கான முயற்சிகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. மெகுல் சோக்ஷி சுவிட்சர்லாந்து, நாட்டிற்கு செல்ல திட்டமிட்டு இருப்பதாக சொல்லப்பட்ட நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications