கத்தார் ஆண்களுக்கு கட்டாய ராணுவப் பணி : புதிய சட்ட மசோதாவுக்கு ஒப்புதல்
தோஹா: கத்தார் நாட்டில் ஆண்களுக்கு மூன்று முதல் நான்கு மாத கட்டாய ராணுவப் பணி குறித்தான புதிய சட்ட மசோதாவுக்கு ஒப்புதலளிக்கப் பட்டுள்ளது.
நான்கு மாதங்கள் ஆண்கள் கட்டாய ராணுவ சேவையில் ஈடுபடுவது குறித்தான வரைவு சட்டத்திற்கு கத்தார் அரசு நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. இத்தகைய சட்டம் இயற்றப்படுவது அந்நாட்டில் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
பட்டதாரிகளாக இருக்கும் 18-லிருந்து 35 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கு மூன்று மாத காலமும், பட்டதாரிகள் இல்லையென்றால் அவர்கள் நான்கு மாத காலமும் ராணுவத்தில் பணிபுரிவது என்பது இச்சட்டத்தில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா, ஒப்புதலுக்காக ஆலோசனைக் கவுன்சிலான மஜ்லிஸ் அல்-சுராவிற்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் ஒப்புதல் கிடைத்த பின்னர், இந்த மசோதா சட்டமாக இயற்றப் படும் எனத் தெரிகிறது.
நாட்டின் பாதுகாப்பிற்காக வழக்கமான படைகளோடு கூடுதலாக, அதனை வலுப்படுத்தும் விதத்தில் ஆதரவுப் படை இருக்கவேண்டும் என்ற எண்ணத்திலேயே இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆனால், கத்தார் இளைஞர்கள் தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்ளும்விதமாகவே இந்தத் திட்டம் துவக்கப்பட்டுள்ளதாக மற்றொரு அரசு அதிகாரி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications