For Daily Alerts
Just In
இந்தோனேசியாவின் டர்னேட் தீவு அருகே மொலுக்கா கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
கிழக்கு இந்தோனேசியாவில் உள்ள டர்னேட் தீவுக்கு அருகே மொலுக்கா கடல் பகுதியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவாகி இருந்தது. இந்த நிலநடுக்கம் 48 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.
முன்னதாக இந்தோனேசியாவின் சுலாவசி தீவில் உள்ள பைதுங் அருகே 10 மணிநேரத்திற்கு முன்பு நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவாகி இருந்தது. இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
டர்னேட் பகுதியில் கடந்த 7 நாட்களில் 33 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
English summary
Strong quake measuring 6.9 in the Richter scale hit Molucca sea on friday.
Story first published: Friday, November 21, 2014, 16:46 [IST]