ஆண்டுதோறும், ரேபிஸுக்கு பலியாகும் 24,000 ஏழை ஆப்பிரிக்கர்கள்: அதிர்ச்சித் தகவல்
டாகர்: ஆண்டுதோறும் உலக மக்களில் சுமார் 55 ஆயிரம் பேர் வெறிநாய்க்கடியால் பலியாவதாக தெரிய வந்துள்ளது.
வெறிநாய்க்கடியால் ரேபிஸ் என்ற நோய் தாக்குதலுக்கு ஆளாகி அப்பாவி மக்கள் பலியாவதைத் தடுக்க உலக நாடுகள் கடும் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. அதன் படி, வீட்டில் வளர்க்கப் படும் செல்லப் பிராணிகள் மற்றும் தெரு நாய்களுக்கு தடுப்பூசிப் போடும் பணி மேற்கொள்ளப் பட்டு வருகிறது.
இருந்த போதும், ஆண்டுதோறும் சுமார் 55 ஆயிரம் பேர் வெறிநாய்க்கடிக்கு ஆளாகி பலியாவதாக சமீபத்திய அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

தடுப்பு நடவடிக்கை....
செனகல் நாட்டு தலைநகர் டாகரில் வெறிநாய் கடி குறித்த நிபுணர்கள் மாநாட்டில், நாய்கடி மற்றும் செல்லப்பிராணி கடிப்பதால் ஏற்படும் அபாயத்தை தடுக்கும் நடவடிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது.

55 ஆயிரம் பலி...
அதில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை ஒன்றில், உலகம் முழுவதும் இதன் பாதிப்பினால் ஆண்டிற்கு சுமார் 55 ஆயிரம் பேர் பலியாவதாக தெரிய வந்துள்ளது.

ஆப்பிரிக்காவில்....
அதிலும் குறிப்பாக ஆப்பிரிக்கா நாடுகளில் மட்டும் 24 ஆயிரம் பேர் பலியாகிறார்கள் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

மருத்துவ விழிப்புணர்வு....
ஆப்பிரிக்காவில் பலி எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுவதற்கு முக்கியக் காரணம், வெறிநாய்க்கடியால் பாதிக்கப் பட்டவர்கள் அதற்குரிய மருத்துவ வசதி மேற்கொள்ளாமல் போவதே என அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப் பட்டுள்ளது.

ஊசியின் விலை....
வெறி நாய்க்கடிக்கு போடப்படும் ஒரு ஊசியின் விலை இந்திய மதிப்பில் சுமார் ரூ.800. பொதுவாக நாய் கடியால் பாதிக்கப்படுபவர் குறைந்தபட்சம் 4 முதல் 5 ஊசி போட வேண்டும்.

இலவச மருத்துவ உதவி...
பொதுவாக மக்களின் வறுமையே பலி எண்ணிக்கை அதிகரிப்பின் காரணமாக சொல்லப்பட்டாலும், சில நாடுகளில் வெறிநாய்க்கடிக்கான மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications