ஆண்டுதோறும், ரேபிஸுக்கு பலியாகும் 24,000 ஏழை ஆப்பிரிக்கர்கள்: அதிர்ச்சித் தகவல்
டாகர்: ஆண்டுதோறும் உலக மக்களில் சுமார் 55 ஆயிரம் பேர் வெறிநாய்க்கடியால் பலியாவதாக தெரிய வந்துள்ளது.
வெறிநாய்க்கடியால் ரேபிஸ் என்ற நோய் தாக்குதலுக்கு ஆளாகி அப்பாவி மக்கள் பலியாவதைத் தடுக்க உலக நாடுகள் கடும் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. அதன் படி, வீட்டில் வளர்க்கப் படும் செல்லப் பிராணிகள் மற்றும் தெரு நாய்களுக்கு தடுப்பூசிப் போடும் பணி மேற்கொள்ளப் பட்டு வருகிறது.
இருந்த போதும், ஆண்டுதோறும் சுமார் 55 ஆயிரம் பேர் வெறிநாய்க்கடிக்கு ஆளாகி பலியாவதாக சமீபத்திய அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

தடுப்பு நடவடிக்கை....
செனகல் நாட்டு தலைநகர் டாகரில் வெறிநாய் கடி குறித்த நிபுணர்கள் மாநாட்டில், நாய்கடி மற்றும் செல்லப்பிராணி கடிப்பதால் ஏற்படும் அபாயத்தை தடுக்கும் நடவடிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது.

55 ஆயிரம் பலி...
அதில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை ஒன்றில், உலகம் முழுவதும் இதன் பாதிப்பினால் ஆண்டிற்கு சுமார் 55 ஆயிரம் பேர் பலியாவதாக தெரிய வந்துள்ளது.

ஆப்பிரிக்காவில்....
அதிலும் குறிப்பாக ஆப்பிரிக்கா நாடுகளில் மட்டும் 24 ஆயிரம் பேர் பலியாகிறார்கள் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

மருத்துவ விழிப்புணர்வு....
ஆப்பிரிக்காவில் பலி எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுவதற்கு முக்கியக் காரணம், வெறிநாய்க்கடியால் பாதிக்கப் பட்டவர்கள் அதற்குரிய மருத்துவ வசதி மேற்கொள்ளாமல் போவதே என அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப் பட்டுள்ளது.

ஊசியின் விலை....
வெறி நாய்க்கடிக்கு போடப்படும் ஒரு ஊசியின் விலை இந்திய மதிப்பில் சுமார் ரூ.800. பொதுவாக நாய் கடியால் பாதிக்கப்படுபவர் குறைந்தபட்சம் 4 முதல் 5 ஊசி போட வேண்டும்.

இலவச மருத்துவ உதவி...
பொதுவாக மக்களின் வறுமையே பலி எண்ணிக்கை அதிகரிப்பின் காரணமாக சொல்லப்பட்டாலும், சில நாடுகளில் வெறிநாய்க்கடிக்கான மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications