9/11 நினைவு தினத்திற்கு முந்தைய நாள் உலக வர்த்தக மையத்தின் மேல் தோன்றிய வானவில்
நியூயார்க்: 9/11 தாக்குதலின் 14வது நினைவு தினத்திற்கு முந்தைய நாள் நியூயார்க் நகரில் உள்ள உலக வர்த்தக மையத்தின் மேல் அழகிய வானவில் தோன்றியது மக்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
2001ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ம் தேதி அல் கொய்தா தீவிரவாதிகள் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுரங்களை விமானங்கள் மூலம் தாக்கி தரை மட்டமாக்கினர். இந்த தாக்குதல் நடந்து இன்றுடன் 14 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
இந்நிலையில் நேற்று காலை 8 மணி அளவில் உலக வர்த்தக மையத்தின் மேல் வானவில் அழகாகத் தோன்றியது. வானவில்லின் அழகை மக்கள் ரசிக்கையில் மற்றும் ஒரு வானவில் தோன்றி மக்களுக்கு இரட்டை மகிழ்ச்சி அளித்தது. இரட்டை வானவில்லை மக்கள் புகைப்படம் எடுத்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளனர்.
|
வானவில்
அதிசய வானவில். 9/11 நினைவு தினத்திற்கு முந்தைய நாள் உலக வர்த்தக மையத்தின் மேல் தோன்றிய வானவில்லை நான் புகைப்படம் எடுத்தேன் என்று பென் ஸ்டர்னர் தெரிவித்துள்ளார்.
|
இரட்டை வானவில்
வியாழக்கிழமை காலை நியூயார்க் நகரில் தோன்றிய இரட்டை வானவில்லை ஜெப் டிராப்கின் புகைப்படம் எடுத்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
|
நியூயார்க்
நியூயார்க்கில் காலை வேளையில் வானில் அழகான இரட்டை வானவில். #doublerainbow என சோரன்சென் ட்வீட் செய்துள்ளார்.
|
காலை
இன்று காலை இது தான் நடந்தது என்று கூறி வானவில்லின் புகைப்படத்தை வியாழக்கிழமை மாலை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் மிஷல் பிரான்சன்.












Click it and Unblock the Notifications