Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிறை தெரிந்தது.. சவுதியில் ரமலான் நோன்பு நாளை தொடங்கும் என அறிவிப்பு! தமிழகத்தில் எப்போது தொடங்கும்?

Subscribe to Oneindia Tamil

சவுதி: இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதத்தில் முஸ்லீம்கள் நோன்பு இருப்பார்கள். இந்தியாவில் இந்த பிறை தெரியாத நிலையில், ரமலான் மாதம் மார்ச் 2ல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே சவுதி உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் இன்றே பிறை தெரிந்த நிலையில், மார்ச் 1ம் தேதி முதலே ரமலான் மாதம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமியர்களின் புனித பண்டிகையாக ரம்ஜான் கொண்டாடப்படுகிறது. ரமலான் மாதத்தில் நோன்பு இருந்து உலகெங்கும் உள்ள இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகையைக் கொண்டாடுவார்கள்.

ramadan middle east

ரமலான் நோன்பு

ரமலான் மாத நோன்பும் ரம்ஜான் பண்டிகையும் பிறையின் அடிப்படையிலேயே முடிவு செய்யப்படும். உலகின் ஒவ்வொரு பகுதியிலும் எப்போது பிறை தெரிகிறதோ அதை வைத்தே நோன்பு தேதியும் பண்டிகையும் கொண்டாடப்படும். இதனால் இது ஒவ்வொரு இடங்களிலும் ஒருநாள் வரை மாறுபடும். ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் நோன்பு இருப்பார்கள். அப்போது சூரிய உதயம் முதல் அஸ்தமனம் வரை உணவு எதுவும் எடுத்துக் கொள்ள மாட்டார்கள். மாலை இப்தார் விருந்து வைத்து விரதத்தை முடிப்பார்கள்.

சவுதியில் தென்பட்ட பிறை

இதற்கிடையே ஹிஜ்ரி 1446 ரமலான் தொடக்கத்தைக் குறிக்கும் பிறை சவூதி அரேபியாவில் சுதைர் மற்றும் துமைர் ஆய்வகங்களில் தென்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு ரமலான் புனித மாதம் இன்று இரவு, பிப்ரவரி 28ம் தேதி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிறை தெரிந்த நிலையில், சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் உள்ள முஸ்லிம்கள் இன்றிரவு முதல் தங்கள் தராவீஹ் தொழுகையைத் தொடங்குகிறார்கள். நாளை மார்ச் 1 (சனிக்கிழமை) முதல் நோன்பு இருக்கவும் தொடங்கவுள்ளனர்.

இன்றிரவு பிறை தென்பட்டது உறுதிசெய்யப்பட்ட நிலையில், இன்றிரவு முதல் ரமலான் புனித மாதம் தொடங்கும் என்பதை அங்குள்ள மத தலைவர்கள் உறுதி செய்தனர். சவூதி அரேபியாவில் ரமலான் தொடங்கியுள்ள நிலையில், ஐக்கிய அமீரகம், கத்தார், பஹ்ரைன், குவைத்உள்ளிட்ட பல நாடுகளும் அதையே பின்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் எப்போது?

அதேநேரம் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் போன்ற பிற நாடுகளில் இன்று பிறை தெரியவில்லை. எனவே, நாளை இரவு முதலே ரமலான் மாதம் தொடங்கும். இங்கு நோன்பு பின்பற்றுவதும் ஒரு நாள் வரை தள்ளிப்போகும்.

முன்னதாக இன்று பிறை தெரியாததால் ரம்ஜான் நோன்பு மார்ச் 2ம் தேதி தொடங்கும் என்று தமிழக அரசின் தலைமை காஜி சலாஹுத்தீன் முகம்மது அய்யூப் அறிவித்திருந்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்பில், "ஹிஜ்ரி 1446 ஷாபான்மாதம் 29ம் தேதி வெள்ளிக்கிழமை ஆங்கில மாதம் 28 - 02-2025 தேதி அன்று மாலை ரமலான் மாத பிறை சென்னையிலும் இதர மாவட்டங்களிலும் காணப்படவில்லை.

ஆகையால் ஞாயிற்றுக்கிழமை ஆங்கில மாதம் 02-03-2025ம் தேதி அன்று ரமலான் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. ஆகையால் ஷபே கத்ர் 27-03-2025 வியாழக்கிழமை மற்றும் 28-03-2025 வெள்ளிக்கிழமை ஆகிய இருநாட்களின் மத்தியிலும் இரவில் ஆகும்" என்று அதில் கூறப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+