வளைகுடா நாடுகளில் புனித ரமலான் நோன்பு துவங்கியது
துபாய்: ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் புனித ரமலான் நோன்பு வியாழக்கிழமை துவங்கியது.
ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் புனித ரமலான் நோன்பு வியாழக்கிழமை துவங்கியது. இந்த மாதம் முழுவதும் ஒவ்வொரு முஸ்லிமும் அதிகாலை முதல் இரவு வரை உணவு உண்ணாமல், நீர் அருந்தாமல் நோன்பு இருப்பார்கள்.

ரமலான் நோன்பு துவங்கியதையொட்டி துபாய் உள்ளிட்ட அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் சிறப்பு நிகழ்ச்சிகள், சொற்பொழிவுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. துணை அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் வழிகாட்டுதலில் துபாய் சர்வதேச திருக்குர்ஆன் விருது வழங்கும் நிகழ்ச்சி 19வது ஆண்டாக நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சி நேற்று முதல் ஜூலை 7ம் தேதி வரை துபாய் வர்த்தக தொழில் மைய அரங்கில் நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் சர்வதேச சொற்பொழிவாளர்களின் உரை நிகழ்ச்சி மற்றும் திருக்குர்ஆன் மனப்பாட போட்டி நடைபெறும்.












Click it and Unblock the Notifications