பலாத்காரம் செய்த மாஜி காதலனின் ஆணுறுப்பை அறுத்து, சுத்தியலால் அடித்துக் கொன்ற சீன பெண்
ஹாங்காங்: ஹாங்காங்கில் தன்னை பாலியல் பலாத்காரம் செய்த முன்னாள் காதலனின் ஆணுறுப்பை அறுத்து அவரை சுத்தியலால் அடித்துக் கொலை செய்துள்ளார் சீன பெண் ஒருவர்.
சீனாவைச் சேர்ந்தவர் இயூங் கி(41). ஹாங்காங்கில் வசித்து வரும் அவருக்கும் பியானோ வாத்தியாரான சோ ஹூய்(32) என்பவருக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டுள்ளது. திருமணமான ஹூய் இயூங்குடன் பல ஆண்டுகள் கள்ளத் தொடர்பு வைத்திருந்தார். அவர் இயூங்கிடம் பலமுறை பணம் வாங்கி அதை திருப்பித் தரவில்லை.
இந்நிலையில் அவர் கர்ப்பமான இயூங்கிடம் இருந்து பிரிந்து சென்றார். இதையடுத்து பெண் குழந்தையை பெற்று வளர்த்து வந்தார் இயூங். சம்பவத்தன்று இரவு ஹூய் இயூங் வீட்டிற்கு வந்து அவரை கீழே தள்ளி, அடித்ததுடன் மகளையும் அறைந்தார். இதையடுத்து அவர் இயூங்குடன் வலுக்கட்டாயமாக உறவு வைத்துக் கொண்டார்.
இதையடுத்து இயூங் தூக்க மாத்திரை கலந்த சூப்பை ஹூய்க்கு கொடுத்து அவரது ஆணுறுப்பை அறுத்து டாய்லெட்டில் போட்டு பிளஷ் செய்தார். வலியால் அலறித் துடித்த ஹூய்யை அவர் சுத்தியலால் அடித்துக் கொன்றார்.
முன்னதாக ஹூய் இயூங்கிடம் உன் நிர்வாணப் புகைப்படங்கள் என்னிடம் உள்ளது. நீ பணம் தராவிட்டால் அவற்றை இணையதளத்தில் வெளியிட்டுவிடுவேன் என்று மிரட்டியே பணம் பறித்துள்ளார்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் இயூங்கை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications