எலிசபெத்தை ஏன் பிரிந்தேன்.. முறிந்த காதலுக்கு காரணங்களை அடுக்கும் வார்னே
லண்டன்: முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷான் வார்னே, நடிகை எலிசபெத் ஹர்லி இடையிலான காதல் முறிந்து பல நாட்களாகி விட்டது.
அதற்கான சரியான காரணத்தை இருவரும் இதுவரை தெரிவிக்கவில்லை. ஆனால் இந்த உறவை தொடர்ந்து பராமரிக்க முடியாமல்தான் இருவரும் பிரிந்து விட்டதாக தற்போது வார்னே மனம் திறந்து கூறியுள்ளார்.
கிட்டத்தட்ட 3 ஆண்டு காலம் இந்த இருவரின் காதலும் நீடித்தது. பின்னர் 2013ம் ஆண்டு இருவரும் ஆளுக்கு ஒருபக்கமாக செல்ல முடிவெடுத்து குட்பை சொல்லிக் கொண்டனர்.

டைம் மேகஸின் பேட்டி:
ஹர்லிக்கு 50 வயதாகிறது. வார்னேவுக்கோ 45 வயதுதான். இந்த நிலையில் டைம் மேகஸினுக்கு வார்னே ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் ஹர்லியுடனான காதல் முறிவு குறித்தும் பேசியுள்ளார்.

அருமையான டின்னர் இரவுகள்:
"உறவுகள் எப்போதுமே கடினமானவைதான். உண்மையிலேயே கஷ்டமானது. ஆனால் அப்படி ஒரு நிலை வரக் கூடாது. இருப்பினும் எங்களுக்கு அப்படி ஒரு கஷ்டம் வந்தது.எங்களுக்குள் எப்போதுமே அருமையான டின்னர் இரவுகள் அமையும். அதேசமயம், அந்த இரவுகள் தொடர்ந்து நீடிக்கவில்லை.

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு:
எங்களது வேலை வேறு பிரச்சினையாக இருந்தது. இருவரும் அவரவர் வேலையில் பிசியாக இருந்து விட்டோம். அதுவும் உறவில் சிக்கல் வர ஒரு காரணம்.

விவசாயி மட்டுமே:
அதேசமயம், அதனால் மட்டுமே எங்களது உறவு பிரியவில்லை.நாங்கள் முதன் முதலில் சந்தித்தபோது அவர் வேலை எதிலும் இல்லை. விவசாயியாக மட்டுமே இருந்தார். நான் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றிருந்தேன்.

மாடலிங் உலகில் ஹர்லி:
பின்னர் ஹர்லி நடிக்கப் போனார். மாடலிங் செய்யப் போனார். டிவி சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். நானும் மீண்டும் கிரிக்கெட் ஆட ஆரம்பித்தேன். எங்களுக்குள் நேரம் இல்லாமல் போனது.

அமெரிக்காவுக்கு பறந்தார்:
அவர் அமெரிக்காவுக்குப் போனார். மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். நானும் கிரிக்கெட் கமெண்டரி பக்கம் கவனம் செலுத்தினேன். என்னுடைய குழந்தைகள் ஆஸ்திரேலியாவில் இருந்தனர்.

குழப்பமான காதல்:
மொத்தத்தில் எல்லாமே குழப்பமாகி விட்டது. இருவருக்கும் இது ஒரு பெரும் குழப்பமாக மாறிப் போனது. கஷ்டமாகி விட்டது. இதுவும் பிரிய முடிவு செய்ததற்கு ஒரு காரணம்" என்றார் அவர்.பிரிந்தாலும் கூட இருவரும் அவ்வப்போது சந்தித்துக் கொள்ளத் தவறுவதில்லை. முன்பு காதலர்களாக சந்தித்தனர். இப்போது நண்பர்களாக சந்தித்துக் கொள்கிறார்களாம்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications