ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை சுட்டு கொன்ற போட்டி தீவிரவாத அமைப்பு! சிரியாவில் பரபரப்பு
பாக்தாத்: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள்தான் பிறரை கழுத்தறுத்து கொலை செய்து உலகம் பார்த்துள்ளது. இப்போது ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் கழுத்தறுக்க ஒரு தீவிரவாத அமைப்பு வீறுகொண்டு செயலாற்றி வருகிறது. அந்த அமைப்பின் பெயர்தான் ஜெய்ஸ் அல்-இஸ்லாம்.
தன்னை இஸ்லாம் மார்க்கத்தின் ராணுவம் என்று அழைத்துக்கொள்கிறது இவ்வமைப்பு. சிரியாவில் சுமார் 25 ஆயிரம் பேருடன் இந்த இயக்கம் வலுவாக கட்டமைக்கப்பட்டுள்ளது. அண்மையில், பீரங்கி, நவீன ரக துப்பாக்கிகளுடன் அந்த அமைப்பின் தீவிரவாதிகள் நிற்கும் காட்சியை புகைப்படமாக வெளியிட்டது ஜெய்ஸ் அல்-இஸ்லாம்.

தற்போது ஜெய்ஸ் அல்-இஸ்லாம் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு ஷாக் கொடுப்பதாக உள்ளது. ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள், பிற மதத்தவர்களையோ அல்லது, பிற நாட்டு பிணையக் கைதிகளையோ பிடித்து, ஆரஞ்சு வண்ண ஆடை உடுத்தச் செய்து, கழுத்தறுப்பது வழக்கம்.
அதற்கு பதிலடியாக ஜெய்ஸ் அல்-இஸ்லாம் அமைப்பு தீவிரவாதிகளால், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் சிலர் பிடிக்கப்பட்டு, அவர்களுக்கு கறுப்பு ஆடை அணிவித்து, ஜெய்ஸ் அல்-இஸ்லாம் தீவிரவாதிகள் ஆரஞ்சு ஆடை அணிந்துகொண்டு, துப்பாக்கியால் பின்னந்தலையில் சுட்டு துடிக்க துடிக்க கொன்றுள்ளனர்.
தீவிரவாதிகளின் கழுத்தை அறுக்கும் முன்பாக, ஜெய்ஸ் அல்-இஸ்லாம் குழுவின் கமாண்டர் உருது மொழியில் இவ்வாறு பேசுகிறார்: "அல்லா எந்த ஒரு நோயையும் மருந்து இல்லாமல் உருவாக்குவதில்லை". இவ்வாறு கூறிவிட்டு சுட்டுக்கொல்ல சகாக்களுக்கு உத்தரவிடுகிறார்.
இப்போது, யார் உண்மையான போராளிகள் என்பதில் இவ்விரு குரூப்புக்கும் தகராறு வெடித்துள்ளது உறுதியாகிவிட்டது.












Click it and Unblock the Notifications