சிரியா: ராக்கெட் வீச்சில் ராணுவ வீரர்கள் உட்பட 17 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
பெய்ரூட்: சிரியாவில் கிளர்ச்சிப்படையினருக்கும், ராணுவத்தினருக்கும் இடையில் நடைபெற்ற மோதலில் ராக்கெட் குண்டு வீச்சில் சிக்கி ராணுவ வீரர்கள் உள்ளிட 17 பேர் பரிதாபமாகப் பலியாகியுள்ளார்கள்.
அதிபர் ஆசாத்துக்கு எதிராக சிரியாவில் உள்நாட்டு சண்டை நடைபெற்று வருகிறது. இதில், அதிபருக்கு ஆதரவாக ராணுவப்படையினரும், எதிராக கிளர்ச்சிப்படையினரும் மோதி வருகின்றனர்.
இந்நிலையில் அலிப்போ நகருக்கு மேற்குபகுதியில் அரசாங்க கட்டுப்பாட்டில் இருக்கும் ஊருக்குள் கிளர்ச்சியாளர்கள் நடத்தப்பட்ட ராக்கெட் குண்டு தாக்குதலில் சிக்கி, அதில் 5 ராணுவ வீரர்கள், 12 அப்பாவி மக்கள் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
இந்தத் தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக ராணுவமும் ஹெலிகாப்டரிகளில் சென்று கிளர்ச்சியாளர்கள் மீது குண்டு வீச்சு தாக்குதல் நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications