"உக்ரைன் போரில் முதற்கட்ட வெற்றி! எங்கள் அடுத்து இலக்கு இது தான்!" ரஷ்யா பரபர கருத்து
கீவ்: உக்ரைன் நாட்டில் போர் தொடரும் நிலையில், போர் தொடர்பாக ரஷ்யா புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
உக்ரைன் நாட்டில் கடந்த பிப்.24ஆம் தொடங்கிய போர், 4 வாரங்களைக் கடந்து 5ஆவது வாரமாகத் தொடர்கிறது. இது தொடர்பாக இரு தரப்பிற்கும் இடையே நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தையில் எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை..
உக்ரைன் நாட்டில் உள்ள கீவ், கார்கீவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களைக் குறி வைத்து ரஷ்யா தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தி உள்ளது. இதனால் உக்ரைன் மக்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உக்ரைன் போர்
ஒருபுறம் போர் தொடரும் நிலையிலும், மறுபுறம் ரஷ்ய ராணுவம் தனது தொடர்ந்து கொண்டே தான் வருகிறது. இதற்கிடையே உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ரஷ்யா தனது ராணுவ நடவடிக்கைகளைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். மேலும், ரஷ்ய ஆதரவு பெற்ற பிரிவினைவாதிகள் உரிமை கோரும் பிரதேசங்கள் தொடர்பான விவகாரங்களில் கவனம் செலுத்த வேண்டும் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இதன் மூலம் பேச்சுவார்த்தைக்கான அழுத்தத்தை உக்ரைன் அதிகரித்துள்ளது.

முதற்கட்ட இலக்குகள்
இந்நிலையில், உக்ரைன் போர் தொடர்பாகவும் ரஷ்யாவின் இலக்குகள் தொடர்பாகவும் கடந்த வெள்ளிக்கிழமை ரஷ்யா புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த உக்ரைன் போர் விவகாரத்தில் ரஷ்யாவின் இலக்குகள் பெரும்பாலும் நிறைவேறிவிட்டதாகவும் இப்போது ரஷ்யா ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் டான்பாஸ் பகுதியில் கவனம் செலுத்துவதாகவும் ரஷ்யா குறிப்பிட்டுள்ளது.

முதற்கட்ட வெற்றி
இது தொடர்பாக ரஷ்ய பொதுப் பணியாளர்களின் முதன்மைத் தலைவர் செர்ஜி ருட்ஸ்காய் கூறுகையில், "உக்ரைன் ஆயுதப் படைகளின் போர்த் திறனைக் கணிசமாகக் குறைத்துள்ளோம். இது எங்களுக்கான முதற்கட்ட வெற்றி. எங்கள் அடுத்த இலக்கு டான்பாஸின் விடுதலையில் தான் உள்ளது. இதற்கான முக்கிய முயற்சிகளை எடுத்து வருகிறோம்" என்று தெரிவித்துள்ளார். உக்ரைன் போர் 5 வாரங்களைக் கடந்து தொடரும் சூழலில், ரஷ்யா தரப்பின் இந்தக் கருத்து முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

ஊரடங்கு
தொடரும் உக்ரைன் போர் காரணமாக கீவ் நகரில் கடந்த சனிக்கிழமை மாலை முதல் திங்கள் காலை வரை புதிய ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதாக மேயர் விட்டலி கிளிட்ச்கோ அறிவித்தார். அதேபோல உக்ரைன் நாட்டின் மற்றொரு முக்கிய நகரான மரியுபோல் நகரிலும் ரஷ்ய ராணுவத்தின் தாக்குதல் தீவிரமடைந்துள்ளது. இதனால் உக்ரைன் நாட்டின் மரியுபோல் நகரில் வசிக்கும் மக்களின் வாழ்க்கை மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

அதிகரிக்கும் அழுத்தம்
உக்ரைன் போர் தொடர்பாக உலக நாடுகள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் கடுமையான பொருளாதாரத் தடைகளை அறிவித்து வருகின்றன. இருந்த போதிலும், உக்ரைன் போர் முடிவுக்கு வந்ததாகத் தெரியவில்லை. இந்த போர் காரணமாக இரு நாட்டு ராணுவங்கள் மட்டுமின்றி, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலையும் உச்சம் தொட்டுள்ளது.
-
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ்












Click it and Unblock the Notifications