"உக்ரைன் போரில் முதற்கட்ட வெற்றி! எங்கள் அடுத்து இலக்கு இது தான்!" ரஷ்யா பரபர கருத்து
கீவ்: உக்ரைன் நாட்டில் போர் தொடரும் நிலையில், போர் தொடர்பாக ரஷ்யா புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
உக்ரைன் நாட்டில் கடந்த பிப்.24ஆம் தொடங்கிய போர், 4 வாரங்களைக் கடந்து 5ஆவது வாரமாகத் தொடர்கிறது. இது தொடர்பாக இரு தரப்பிற்கும் இடையே நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தையில் எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை..
உக்ரைன் நாட்டில் உள்ள கீவ், கார்கீவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களைக் குறி வைத்து ரஷ்யா தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தி உள்ளது. இதனால் உக்ரைன் மக்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உக்ரைன் போர்
ஒருபுறம் போர் தொடரும் நிலையிலும், மறுபுறம் ரஷ்ய ராணுவம் தனது தொடர்ந்து கொண்டே தான் வருகிறது. இதற்கிடையே உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ரஷ்யா தனது ராணுவ நடவடிக்கைகளைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். மேலும், ரஷ்ய ஆதரவு பெற்ற பிரிவினைவாதிகள் உரிமை கோரும் பிரதேசங்கள் தொடர்பான விவகாரங்களில் கவனம் செலுத்த வேண்டும் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இதன் மூலம் பேச்சுவார்த்தைக்கான அழுத்தத்தை உக்ரைன் அதிகரித்துள்ளது.

முதற்கட்ட இலக்குகள்
இந்நிலையில், உக்ரைன் போர் தொடர்பாகவும் ரஷ்யாவின் இலக்குகள் தொடர்பாகவும் கடந்த வெள்ளிக்கிழமை ரஷ்யா புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த உக்ரைன் போர் விவகாரத்தில் ரஷ்யாவின் இலக்குகள் பெரும்பாலும் நிறைவேறிவிட்டதாகவும் இப்போது ரஷ்யா ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் டான்பாஸ் பகுதியில் கவனம் செலுத்துவதாகவும் ரஷ்யா குறிப்பிட்டுள்ளது.

முதற்கட்ட வெற்றி
இது தொடர்பாக ரஷ்ய பொதுப் பணியாளர்களின் முதன்மைத் தலைவர் செர்ஜி ருட்ஸ்காய் கூறுகையில், "உக்ரைன் ஆயுதப் படைகளின் போர்த் திறனைக் கணிசமாகக் குறைத்துள்ளோம். இது எங்களுக்கான முதற்கட்ட வெற்றி. எங்கள் அடுத்த இலக்கு டான்பாஸின் விடுதலையில் தான் உள்ளது. இதற்கான முக்கிய முயற்சிகளை எடுத்து வருகிறோம்" என்று தெரிவித்துள்ளார். உக்ரைன் போர் 5 வாரங்களைக் கடந்து தொடரும் சூழலில், ரஷ்யா தரப்பின் இந்தக் கருத்து முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

ஊரடங்கு
தொடரும் உக்ரைன் போர் காரணமாக கீவ் நகரில் கடந்த சனிக்கிழமை மாலை முதல் திங்கள் காலை வரை புதிய ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதாக மேயர் விட்டலி கிளிட்ச்கோ அறிவித்தார். அதேபோல உக்ரைன் நாட்டின் மற்றொரு முக்கிய நகரான மரியுபோல் நகரிலும் ரஷ்ய ராணுவத்தின் தாக்குதல் தீவிரமடைந்துள்ளது. இதனால் உக்ரைன் நாட்டின் மரியுபோல் நகரில் வசிக்கும் மக்களின் வாழ்க்கை மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

அதிகரிக்கும் அழுத்தம்
உக்ரைன் போர் தொடர்பாக உலக நாடுகள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் கடுமையான பொருளாதாரத் தடைகளை அறிவித்து வருகின்றன. இருந்த போதிலும், உக்ரைன் போர் முடிவுக்கு வந்ததாகத் தெரியவில்லை. இந்த போர் காரணமாக இரு நாட்டு ராணுவங்கள் மட்டுமின்றி, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலையும் உச்சம் தொட்டுள்ளது.
-
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications