ரஷ்யா நடத்திய தாக்குதலில் அமெரிக்கா ஆதரவு சிரியா கிளர்ச்சியாளர்கள் 150 பேர் பலி- சி.ஐ.ஏ. அதிர்ச்சி
டமாஸ்கஸ்: சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கு ஆதரவாக தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா திட்டமிட்டே அமெரிக்கா ஆதரவு கிளர்ச்சியாளர்கள் 150 பேரை படுகொலை செய்துள்ளதாக வெளியான தகவலால் சி.ஐ.ஏ. அதிர்ச்சி அடைந்துள்ளது.
சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கு எதிராக ப்ரீ சிரியா ஆர்மி என்ற கிளர்ச்சிக் குழு உள்நாட்டு யுத்தத்தை நடத்தி வருகிறது. இந்த குழுவுக்கு பயிற்சி மற்றும் ஆயுதங்களை அமெரிக்காவின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ.தான் வழங்கி வருகிறது.

இந்நிலையில் அதிபர் ஆசாத்துக்கு ஆதரவாக அவரை எதிர்க்கும் ப்ரீ சிரியா ஆர்மி, ஐ.எஸ்.ஐ.எஸ்., அல் நூஸ்ரா முன்னணி ஆகியவற்றின் ரஷ்யா வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. ஆனாலும் அமெரிக்கா ஆதரவு ப்ரீ சிரியா ஆர்மியினரைத்தான் ரஷ்யா திட்டமிட்டு தாக்கி அழித்து வருவதாக சி.ஐ.ஏ. தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த சி.ஐ.ஏ. அதிகாரி ஒருவர், திட்டமிட்டே எங்கள் ஆதரவு கிளர்ச்சி குழுவினர் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இதுவரை ப்ரீ சிரியா ஆர்மியின் 150 பேர் ரஷ்யா தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர்.
அவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தை குறிவைத்து தாக்கவே இல்லை. இதனால் ரஷ்யாவுடன் எப்படி பேச்சுவார்த்தை நடத்த முடியும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆனால் ரஷ்யாவோ, நாங்கள் சிரியா விவகாரம் குறித்து அமெரிக்காவுடன் பேசுவதற்கு தயாராக இருக்கிறோம்.. ஐ.எஸ். தீவிரவாதிகளையும் இலக்கு வைத்தே தாக்கி வருகிறோம்" என்று மீண்டும் மீண்டும் கூறி வருகிறது.
இதனிடையே சிரியாவில் பல்வேறு அபாயகரமான பேரழிவை ஏற்படுத்தக் கூடிய கனரக தளவாடங்களை ரஷ்யா பயன்படுத்தி வருகிறது; கொத்து குண்டுகளை சரமாரியாக வீசி வருகிறது என தகவல்கள் வெளியாகி உள்ளன.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications