ரஷ்யாவில் இன்று ஒரே நாளில் 11,231 பேருக்கு கொரோனா- ஜெர்மனி, பிரான்ஸைவிட அதிக பாதிப்பு
மாஸ்கோ: ரஷ்யாவில் இன்று ஒரே நாளில் 11,231 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ரஷ்யாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,77,160 ஆக அதிகரித்துள்ளது.
உலக நாடுகளிலேயே அமெரிக்காவில்தான் மிக மோசமாக கொரோனா மரணங்கள் நிகழ்ந்து வருகின்றன. சுமார் 12 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 74 ஆயிரம் பேர் கொரோனாவால் மாண்டு போயுள்ளனர்.
இதற்கு அடுத்ததாக இத்தாலி, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்தது. இதேபோல் ஜெர்மனி, பிரான்ஸ் நாடுகளிலும் கொரோனாவின் தாக்குதல் இருந்தது.
இந்த நிலையில் ரஷ்யாவில் திடீரென கொரோனா தொற்று நோய் தாக்கம் அதிகரித்திருக்கிறது. நாள்தோறும் 10 ஆயிரம் பேர் அளவுக்கு கொரோனா பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
அலறிய அலங்காநல்லூர்... கணவர் மது அருந்தி விட்டு வந்ததால் மனைவி அதிர்ச்சி.. மகளுடன் தீக்குளித்தார்!
Recommended Video
ரஷ்யாவில் இன்று மட்டும் 11,231 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் ரஷ்யாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையானது 1,77,160 ஆக அதிகரித்திருக்கிறது. ஜெர்மனி, பிரான்ஸ் நாடுகளின் பாதிப்பை விட இது மிக அதிகமானது.