மெட்டா அதிகாரியை "வான்டட்" லிஸ்டில் வைத்த ரஷ்யா.. கிரிமினல் விசாரணை தொடக்கம்.. என்னாச்சு
மாஸ்கோ: மெட்டா நிறுவனத்தின் செய்தி தொடர்பாளரான ஆண்டி ஸ்டோனுக்கு எதிராக கிரிமினல் குற்றசாட்டு விசாரணையை ரஷ்யா தொடங்கியுள்ளது. அதேபோல், தேடப்படும் நபர் பட்டியலிலும் ஆண்டி ஸ்டோன் வைக்கப்பட்டுள்ளார்.
உலக அளவில் மிகெப்பெரும் சமூக வலைத்தள ஜாம்பவான் நிறுவனங்களான பேஸ்புக் , இன்ஸ்டாகிரம் உள்ளிட்ட நிறுவனங்களின் தாய் நிறுவனம் மெட்டா. பல பில்லியன் டாலர் மதிப்பு கொண்ட மெட்டா நிறுவனம் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் தனது அலுவலகத்தை வைத்துள்ளது. அந்த வகையில், ரஷ்யாவிலும் மெட்டா நிறுவனத்தின் அலுவலகம் உள்ளது.

எனினும், கடந்த ஆண்டு உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த பிறகு, ரஷ்யாவில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிரமிற்கு தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது மெட்டா நிறுவனத்தின் செய்தி தொடர்பாளரான ஆண்டி ஸ்டோனுக்கு எதிராக கிரிமினல் குற்றசாட்டு விசாரணையை ரஷ்யா தொடங்கியுள்ளது. அதேபோல், தேடப்படும் நபர் பட்டியலிலும் ஆண்டி ஸ்டோன் வைக்கப்பட்டுள்ளார்.
எனினும் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் என்ன என்பது குறித்து ரஷ்யா தெரிவிக்கவில்லை. மெட்டா நிறுவனத்தின் ஊழியர்கள் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டதாக கூறி அவர்களுக்கு எதிராக கிரிமினல் விசாரணையை தொடங்கியிருப்பதாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ரஷ்யாவின் விசாரணைக்குழு தெரிவித்து இருந்தது. கிரிமினல் விசாரணை எதிர்கொண்டுள்ள நபர்களில் ஆண்டி ஸ்டோனும் இடம் பெற்று இருந்தார்.
மெட்டா நிறுவனத்தின் தளங்களில் ரஷ்யா ராணுவத்திற்கு எதிரான வன்முறை பதிவுகளுக்கு விதிக்கப்பட்டு இருந்த தடையை நீக்கி பயங்கரவாத செயல்களை தூண்டியதாக விசாரணைக்குழு குற்றம் சாட்டியிருந்தது. எனவே இது தொடர்பாகத்தான் ஆண்டி ஸ்டோனுக்கு எதிராக விசாரணையை தொடங்கியிருக்கலாம் எனத் தெரிகிறது.
உக்ரைனுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை குறித்த தவறான தகவல்களை கூகுள் நிறுவனம் அழிக்க தவறியதாகவும் அதற்காக 4 மில்லியன் ரபுள்ஸ் (டாலர் 44,582) அபராதமும் விதித்து இருந்தது. இந்த நடவடிக்கையை ரஷ்யா மேற்கொண்டு மூன்று நாட்களே ஆன நிலையில் தற்போது மெட்டா நிறுவனத்தின் அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications