தண்ணீரில் மூழ்கி ரஷ்ய அமைச்சர் யென்ஜெனி ஜினிசெவ் பலி.. வேறொருவரை காப்பாற்ற முயன்றதால் சோகம்
மாஸ்கோ: ரஷ்யாவின் அவசர சூழ்நிலைகளுக்கான அமைச்சர் யென்ஜெனி ஜினிசெவ் தண்ணீரில் மூழ்கி இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 55.
அவர் ஆர்டிக்கில் ஒரு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது காலமானார். இவரது இறப்பை அந்த துறை அமைச்சகம் உறுதி செய்தது.

இதுகுறித்து அந்த அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் ஆர்டிக் பகுதியில் நோரில்ஸ்கில் அமைச்சர் ராணுவ பயிற்சியை மேற்கொண்டிருந்தார். இந்த பயிற்சியை ஆர்டி எனும் செய்தி நிறுவனத்தின் கேமராமேன் படம் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த கேமராமேன் தவறி தண்ணீரில் விழுந்தார். அவரை காப்பாற்ற யென்ஜெனி போராடிய போது அவர் தண்ணீரில் மூழ்கி இறந்தார்.
அவர் அந்த கேமராமேனை காப்பாற்ற தண்ணீரில் இறங்கிய நிலையில் அவருக்கு என்னவாயிற்று என்பதை யாரும் கண்டுபிடிக்க இயலவில்லை. தண்ணீரில் குதிக்கும் கற்கள் ஏதேனும் குத்தி அவர் இறந்தாரா என தெரியவில்லை. ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் மறு தேர்தலில் வெற்றி பெற்ற 2018 ஆம் ஆண்டு முதல் அவசர சூழ்நிலைக்கான அமைச்சராக இருந்து வந்தார் யென்ஜெனி.
இவர் புதினின் தனிப்படை பாதுகாப்பு அதிகாரியாகவும் இருந்தார். அவருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார். யென்ஜென் மறைவை அடுத்து துணை அமைச்சராக இருந்த அலெக்சாண்டர் சுப்ரியன் பொறுப்பு அமைச்சராக இருந்தார்.












Click it and Unblock the Notifications