4 ஆண்டுகள் கழித்து ட்வீட் செய்த நாதெல்லா: என்ன எழுதி இருக்கிறார் தெரியுமா?
Subscribe to Oneindia Tamil
சான் பிரான்சிஸ்கோ: சத்யா நாதெல்லா நான்கு ஆண்டுகள் கழித்து மைக்ரோசாப்ட் சிஇஓவாக பொறுப்பேற்ற பிறகு இன்று தான் ட்விட்டர் பக்கம் சென்றுள்ளார்.
ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த சத்யா நாதெல்லா(46) மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஇஓவாக பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில் அவர் இன்று ட்வீட் செய்துள்ளார்.
சத்யா கடந்த 2010ம் ஆண்டு ஜூலை மாதம் 11ம் தேதி தான் கடைசியாக ட்விட்டர் பக்கம் சென்றுள்ளார். இதையடுத்து நான்கு ஆண்டுகள் கழித்து இன்று தான் ட்வீட் செய்துள்ளார்.
அவரது ட்வீட் இது தான்,

சிஇஓவாக முதல் முறை...! இனி ஒவ்வொரு ட்வீட்டுக்கும் இடையே 4 ஆண்டுகள் இடைவெளி இருக்காது என்று தெரிவித்துள்ளார்.
நாதெல்லா சிஇஓ ஆன பிறகு அவரை ட்விட்டரில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துக் கொண்டே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications