நிகாதத் சட்டம் விரிவு: சவுதியில் வெளிநாட்டு ஊழியர்கள் 8 ஆண்டுகள் மட்டுமே தங்க அனுமதி
ரியாத்: சவூதி அரேபியாவில் நிகாதத் சட்டத்தை விரிவு படுத்தும் திட்டமாக இனி, வெளிநாட்டு ஊழியர்கள் அதிகபட்சமாக 8 ஆண்டுகள் மட்டுமே அங்கு தங்கலாம் என்ற புதிய கட்டுப்பாடு அமலுக்கு வர உள்ளது.
கடந்தாண்டு சவூதி அரேபியாவில் உள்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில், நிகாதத் என்ற புதிய சட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்படி, அங்கு சட்டவிரோதமான முறையில் தங்கி இருந்த லட்சக்கணக்கான வெளிநாட்டு ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர்.

இந்நிலையில், வெளிநாட்டு ஊழியர்களை மேலும் குறைத்துவிட்டு, அதிக சம்பளத்துடன் உள்நாட்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில் நிகாதத் சட்டத்தை விரிவுபடுத்த அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி, தொழிலாளர் அமைச்சகம் பல புதிய விதிமுறைகளை தயாரித்துள்ளது. இந்த சட்ட முன்வரைவு தற்போது அரசின் ஆய்வில் இருக்கிறது. இந்த சட்டத்தின்படி, வெளிநாட்டு ஊழியர்கள் அதிகபட்சம் 8 ஆண்டுகள் வரை சவூதியில் பணியாற்ற முடியும். இந்த கட்டுப்பாடு காரணமாக ஏராளமான இந்திய தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள்.
ஏனெனில், சவூதி அரேபியாவில் குடியேறிய வெளிநாட்டவர்களில் இந்தியர்கள் தான் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications