சவுதியில் வேலையிழந்து தவிக்கும் தொழிலாளர்கள்... சம்பள பாக்கியை வழங்க மன்னர் அதிரடி உத்தரவு!
ரியாத்: சவுதி அரேபியாவில், வேலையிழந்த தொழிலாளர்களுக்கு உடனடியாக சம்பள பாக்கியை வழங்குமாறு அந்நாட்டு மன்னர் சல்மான் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சவுதி அரேபியாவில், சில தனியார் நிறுவனங்களில் ஏராளமான தொழிலாளர்கள் வேலையிழந்தனர். குறிப்பாக சவுதி ஓஜர் மற்றும் சவுதி பின்லேடன் கட்டுமான நிறுவனங்களில் மட்டும் 2,500-க்கும் மேற்பட்ட வெளிநாட்டுத் தொழிலாளர்கள் வேலை இழந்தனர்.

இது போன்ற சில நிறுவனங்களில் பணியாற்றிய இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசத்தை சேர்ந்த 16,000 தொழிலாளர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதில் 10,000-க்கும் மேற்பட்ட இந்தியர்களும் உள்ளனர். இவர்கள் சம்பளத்தையும் பெற முடியாமல் தாய்நாடும் திரும்ப முடியாமல் தவிக்கின்றனர். இது தொடர்பாக இந்திய அரசு சவுதி அரசிடம் கவலை தெரிவித்திருந்தது.
இந்நிலையில், தொழிலாளர்களுக்கு சம்பளப் பாக்கியை உடனடியாக வழங்க சவுதி மன்னர் சல்மான் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர்பான நடடிவக்கை மேற்கொள்ள அந்நாட்டின் நிதி அமைச்சகம், தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் ஆகியவற்றிற்கு சல்மான் உத்தரவிட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில், மன்னரே நேரடியாக தலையிட்டதையடுத்து, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பணியாளர்களுக்கு சம்பளப் பாக்கியை வழங்க முன்வந்தன. ஆனால் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலையில் நிறுவனங்கள் இருந்தன.
இதனை கருத்தில் கொண்ட மன்னர் சல்மான், தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க 100 மில்லியன் சவுதி ரியால்களை ஒதுக்கி உத்தரவிட்டுள்ளார். தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்குவதற்காக இந்த தொகை நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது. பின்னர் இந்த தொகை வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, சவுதியில் வேலையிழந்து தவித்த இந்தியர்களுக்கு, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இந்தியாவில் இருந்து சவுதிக்கு உணவுப் பொருட்கள் அனுப்ப உத்தவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரம் தொடர்பாக, வெளியுறவுத்துறை இணை அமைச்சர் அந்நாட்டு தொழிலாளர் நலத்துறை அமைச்சரை சந்தித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
இந்தியாவுக்கு திரும்ப விரும்பும் தொழிலாளர்களுக்கு விசா மற்றும் டிக்கெட் வழங்கப்படும் என சவுதி அரசு தெரிவித்துள்ளது.
-
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்?












Click it and Unblock the Notifications