செளதி: கார் ஓட்ட உரிமை கேட்டதால் பெண் செயல்பாட்டாளர்கள் கைதா?
செளதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட அனுமதி கோரும் இயக்கத்தைச் சேர்ந்த பெண் செயற்பாட்டாளர் ஒருவர், தன் மீதும் தனது சக பெண் செயல்பாட்டாளர்கள் மீதும் போலிக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதாகக் கூறியுள்ளார்.
செளதியில் பெண்கள் கார் ஓட்டுவதற்கு இருந்த தடை நீக்கப்படவுள்ள நிலையில், இணையத்தின் தனக்கு கொலை மிரட்டல்கள் வருவதாகப் பெண் செயல்பாட்டாளர் மனல் அல்-ஷரீஃப் கூறியுள்ளார்.
பெண்கள் கார் ஓட்டுவதற்கான தடை ஜூன் 24-ம் தேதி நீக்கப்படவுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு செளதியில் பல பெண் செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், ஷரீஃப் இக்கருத்தைக் கூறியுள்ளார்.
''துரோகிகள்'' என்றும், வெளிநாட்டுச் சக்திகளுடன் இணைந்து பணியாற்றுபவர்கள் என்றும் அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன.
தற்போது ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் மனல் அல்-ஷரீஃப், செயற்பாட்டாளர்களை குறிவைத்து ''ஒருங்கிணைக்கப்பட்ட அவதூறு பிரசாரம்'' நடப்பதாகக் கூறுகிறார்.
கடந்த வாரம் ஏழு ஆண் மற்றும் பெண் செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டனர். பெண்கள் கார் ஓட்டும் உரிமைக்காகப் பிரசாரம் செய்த லுஜெயின் அல் ஹத்லொலும் கைது செய்யப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.
பெண்கள் உரிமை செயற்பாட்டாளர்களான ஈமான் அல்-நஃப்ஜன், அஸீஸ் அல்-யூஸெஃப், டாக்டர் ஆயாஷா அல்-மானே, டாக்டர் இப்ராஹிம் அல்-மொடிமி மற்றும் முகமது அல் ரபியா ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளதாக நம்புவதாக அம்னெஸ்டி அமைப்பு கூறியுள்ளது.
செளதியில் பெண்கள் எடுக்கும் பல்வேறு முடிவுகளுக்கும், செயல்படுவதற்கும் ஆண்களின் அனுமதியைப் பெற வேண்டும் என சட்டம் உள்ளது.
பழமைவாத செளதி நாட்டில், சமூக சீர்திருத்தங்களை செய்வதாக, பட்டத்து இளவரளர் சல்மான் பாராட்டப்பட்டார்.
''செளதி இளவரசர் சல்மான் தன்னை சீர்திருத்தவாதியாக காட்டிக்கொண்டார். ஆனால், தற்போது செளதியில் எதிர்ப்பு தெரிவிக்கும் குரல்களை அடக்க அடக்குமுறையைப் பயன்படுத்துகிறார்'' என அம்னெஸ்டி அமைப்பு கூறுகிறது.
பிற செய்திகள்:
- குமாரசாமியை தேடி அதிர்ஷ்டம் வந்த வழியைப் பாருங்கள்!
- கர்நாடகா: பெரும்பான்மையை நிரூபிக்க எத்தனை நாட்கள் கேட்கிறார் குமாரசாமி?
- நம்பிக்கை வாக்கெடுப்புகளில் வீழ்ந்த அரசுகள்!
- இளவரசர் ஹாரி - மெகன் திருமணத்தின் மகிழ்ச்சிமிக்க தருணங்கள்
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications