பத்திரிக்கையாளர் ஜமால் கொலை.. 18 ''ஹிட்மேன்களை'' விசாரிக்கும் சவுதி.. துருக்கிக்கு அதிர்ச்சி!
பத்திரிக்கையாளர் ஜமால் கசோக்கியின் கொலையில் தொடர்புடைய 18 பேரை சவுதி நாட்டு அரசே விசாரிக்க இருப்பதாக முடிவெடுத்து உள்ளது.
இஸ்தான்புல்: பத்திரிக்கையாளர் ஜமால் கசோக்கியின் கொலையில் தொடர்புடைய 18 பேரை சவுதி நாட்டு அரசே விசாரிக்க இருப்பதாக முடிவெடுத்து உள்ளது. அவர்களை நாடு கடத்தும்படி துருக்கி கோரியது நிராகரிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் வாழ்ந்து வந்த சவுதியை சேர்ந்த பிரபல பத்திரிக்கையாளர் ஜமால் கசோக்கி சவுதி அரசாங்கத்தால் கொலை செய்யப்பட்டார். இவரை கொலை செய்ததை சவுதி அரசு ஒப்புக்கொண்டு உள்ளது.
ஆனால் மேல்மட்ட அதிகாரிகள் யாருக்கும் இந்த கொலை குறித்து தெரியாது என்றுள்ளது. ஜமால் 18 பேர் கொண்ட ''ஹிட்மேன் படையால்'' கொல்லப்பட்டார் என்று கூறியுள்ளது. ஹிட்மேன் படை என்பது காசுக்காக அரசியல் கொலை செய்யும் குழுவாகும்.

கைது செய்தனர்
இந்த நிலையில் இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்டு இருக்கும் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் பலர் சவுதி அரசாங்கத்திற்கு நெருக்கமானவர்கள். இதில் சிலர் சவுதி முடி இளவரசரின் மாளிகையில் வேலை பார்த்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இப்போது கைதாகி உள்ளனர்.

என்ன விசாரணை
இந்த நிலையில் இந்த கொலை துருக்கியில் நடந்த காரணத்தால் துருக்கி தனி விசாரணை நடத்துகிறது. கொல்லப்பட்டது சவுதி பத்திரிக்கையாளர் என்பதால் சவுதி தனி விசாரணை நடத்துகிறது. இது இல்லாமல் அமெரிக்காவும் தனியாக விசாரணை நடத்தி வருகிறது. இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

துருக்கி கோரிக்கை
இந்த நிலையில் துருக்கி தனது நாட்டில் கொலை நடந்த காரணத்தால் முக்கியமான கோரிக்கை ஒன்றை வைத்துள்ளது. ஜமாலை கொன்றவர்கள் என்று கைது செய்யப்பட்டு இருக்கும் 18 பேரையும் தங்கள் நாட்டிற்கு நாடு கடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது. தங்கள் நாட்டில் அவர்களை விசாரிக்க வேண்டும் என்று துருக்கி கோரிக்கை வைத்துள்ளது.

விசாரிக்க உள்ளது
ஆனால் சவுதி இதற்கு மறுப்பு தெரிவித்து உள்ளது. அதன்படி யாரையும் விசாரணைக்காக வெளிநாட்டிற்கு அனுப்ப முடியாது, அவர்கள் சவுதியில் வைத்துதான் விசாரிக்கப்படுவார்கள் என்று சவுதி அரசு கூறியுள்ளது. 18 பேரையும் கண்டிப்பாக துருக்கி அனுப்ப முடியாது, ஜமால் கொலை குறித்த விசாரணையை சவுதி அரசே செய்யும் என்று கூறியுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications