வீடியோ கேம்ஸ் ஆடிய சிறுமியை பலாத்காரம் செய்த 12, 13 வயது சிறுவர்கள்!
நியூபோர்ட்: அமரெிக்காவில் 10 வயது சிறுமி வீடியோ கேம்ஸில் விளையாடிக் கொண்டிருந்தபோது, இரண்டு பள்ளிச் சிறார்கள் அந்த சிறுமியை பலாத்காரம் செய்து விட்டனர். ஆனால் இருவருக்கும் வயது குறைவு என்பதால் அவர்களுக்கு சிறைத் தண்டனை கிடைக்காமல் தப்பி விட்டனர்.
நியூபோர்ட் என்ற ஊரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த பத்து வயது சிறுமி சம்பவத்தன்று தனது வீட்டில் வீடியோ கேம்ஸ் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது 12 மற்றும் 13 வயது உடைய இரண்டு நண்பர்கள் அங்கு வந்தனர். பின்னர் அந்த சிறுமியை கட்டாயப்படுத்தி பலாத்காரத்தில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவத்தை அந்த சிறுமி தனது குடும்பத்தாரிடம் தெரிவிக்காமல் நான்கு மாத காலமாக மறைத்து வந்துள்ளார். இந்த நிலையில் மீண்டும் ஒருமுறை அதே சிறுவர்கள், இந்த சிறுமியுடன் சில்மிஷத்தில் ஈடுபட்டபோது அந்த சிறுமியின் தாயார் அதைப்பார்தது விட்டார்.
அதன் பிறகுதான் ஏற்கனவே ஒருமுறை தனது மகளை அந்த சிறார்கள் சேதப்படுத்தியது தாயாருக்குத் தெரிய வந்து அதிர்ந்தார். இதையடுத்து போலீஸில் புகார் தரப்பட்டு கோர்ட்டில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
ஆனால் இரு சிறார்களுக்கும் வயது குறைவு என்பதால் அவர்களுக்கு சிறைத் தண்டனை அளிக்க இயலாது என்று கோர்ட்டில் நீதிபதி இயான் மர்பி கூறி விட்டார்.
அதேசமயம், இருவரும் குற்றவாளிகள்தான் என்றும் நீதிபதி அறிவித்தார். இருவருக்கும் 3 மாத காலத்திற்கு காலில் மின் கண்காணிப்பு அட்டையைப் பொருத்துமாறும், அவர்கள் தினசரி இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும் இருவருக்கும் மன நல ஆலோசனை வழங்கப்பட வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.