சர்ச் என்ஜினால் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும்
வாஷிங்டன்: யாருக்கு வாக்களிப்பது என்ற குழப்பத்தில் இருக்கும் வாக்காளர்கள் சர்ச் என்ஜின் முடிவுகள் மூலம் ஒரு வேட்பாளரை தேர்வு செய்வது ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள அமெரிக்கன் இன்ஸ்டிடியூட் ஆப் பிஹேவியரல் ரிசர்ச் மற்றும் டெக்னாலஜியில் பணிபுரியும் மூத்த உளவியல் ஆய்வாளர் எப்ஸ்டீன். அவருக்கு தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு சர்ச் என்ஜின்களில் கிடைக்கும் அதிக மதிப்பெண் வாக்காளர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்துகிறதா என்பதை அறிய ஆவல்.

இதையடுத்து அவர் இந்தியாவில் உள்ள 28 மாநிலங்களில் 26 மாநிலங்களைச் சேர்ந்த 18 முதல் 70 வயது வரை உள்ள 2 ஆயிரம் வாக்காளர்கள் அதாவது யாருக்கு வாக்களிப்பது என்ற தெளிவில்லாமல் இருப்பவர்களை தேர்வு செய்தார். கற்பனையான சர்ச் என்ஜினான கடூடுள் என்பதின் முடிவுகளை 15 நிமிடங்கள் படிக்குமாறு அவர்களை கேட்டுக் கொண்டார். அந்த முடிவுகள் பாஜக பிரதமர் வேட்பாளர் மோடி அல்லது காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி அல்லது ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகிய யாருக்கோ சாதகமாக இருந்துள்ளது.
அந்த முடிவுகள் யாருக்கு சாதகமாக உள்ளதோ அவருக்கு 12 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளது. அதாவது சர்ச் என்ஜின் முடிவுகள் வாக்காளர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சர்ச் என்ஜின் முடிவுகள் தேர்தல் முடிவுகளை 2.9 சதவீதம் வரை மாற்றும் திறன் கொண்டவை என்பது தெரிய வந்துள்ளது.
இது குறித்து எப்ஸ்டீன் கூறுகையில்,
சர்ச் என்ஜினின் தரவரிசை பாராட்பட்சமானது என்பது பலருக்கு தெரியவில்லை. இதை ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளோம். இதை எல்லாம் தடுக்க சர்ச் என்ஜின் தரவரிசை கண்காணிக்கப்பட வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications