மாயமான மலேசிய விமானத்தை தேட பல தலைமுறைகள் ஆகும்: மலேசியன் ஏர்லைன்ஸ் உயர் அதிகாரி
கோலாலம்பூர்: மாயமான மலேசிய விமானத்தை கண்டுபிடிக்க பல தலைமுறை ஆகலாம் என்று மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி 239 பேருடன் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு கிளம்பிய மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் மாயமானது. பின்னர் விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்துவிட்டதாக மலேசிய அரசு அறிவித்தது.
இதையடுத்து தெற்கு இந்திய பெருங்கடலில் விமானத்தை தேடும் பணி நடந்து வருகிறது.
ஒன்றும் இல்லை
தெற்கு இந்திய பெருங்கடல் பகுதியில் 26 நாடுகள் மாதக்கணக்கில் விமானத்தை தேடி வரும் நிலையிலும் ஒரு பாகம் கூட இதுவரை கிடைக்கவில்லை.
விமானம்
ஏதோ விபரீதம் விமானத்திற்கு நடந்துள்ளது. விமானம் திரும்பி வர முயற்சி செய்து முடியாமல் போயுள்ளது என்று நான் நினைக்கிறேன். அது தெற்கு இந்திய பெருங்கடலில் தான் எங்கோ உள்ளது என்று மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவன உயர் அதிகாரியான ஹ்யூ டன்லெவி தெரிவித்துள்ளார்.
தலைமுறைகள்
விமானம் கடலில் விழுந்தது என்றால் அதன் பாகங்கள் பெரிய பகுதியில் சிதறிக் கிடக்கலாம். கடலில் மலைகள் உள்ளன. அதனால் விமானத்தை தேட பல தலைமுறைகள் ஆகலாம் என்றார் டன்லெவி.
மலேசிய அரசு
விமானம் திரும்பி வந்ததை மலேசிய அரசு ஏன் உடனடியாக தெரிவிக்கவில்லை. ஒரு விமானம் திரும்பி வருவதை ராணுவம் பார்த்தும் ஒன்றும் செய்யவில்லை. அவர்களுக்கு அது எம்.ஹெச்.370 என்று தெரியவில்லை. ஒரு விமானம் திரும்பியதை அதிகாரிகளால் உடனே கண்டுபிடிக்க முடியவில்லை. அது ஏன் என்று எனக்கு தெரியவில்லை என்றார் டன்லெவி.
கடலுக்கு அடியில்
விமானத்தை ஆளில்லா நீர்மூழ்கி கப்பல் தேடியும் ஒரு பாகம் கூட கிடைக்கவில்லை. இந்நிலையில் விமானம் தற்போது தேடப்பட்டு வரும் இடத்திலேயே இல்லை என்று சில விமானிகள் கூறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.