பாகிஸ்தானில் தொடரும் அதிரடி: ஒரே நாளில் 7 தீவிரவாதிகள் தூக்கிலிடப்பட்டனர்!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இன்று ஒரே நாளில் 7 தீவிரவாதிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
பாகிஸ்தானில் பெஷாவர் பள்ளிக்கூட தாக்குதலுக்கு பின்னர் தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிகையாக மீண்டும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு வருகிறது.
தூக்கு தண்டனை மீண்டும் கொண்டு வந்த பிறகு பாகிஸ்தானில் அடுத்தடுத்து தீவிரவாதிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுகிறது.

பாகிஸ்தானில் உள்ள கராச்சி, பைசலாபாத், ராவல்பிண்டி, சுக்கூர் சிறைகளில் மொத்தம் 7 தீவிரவாதிகளுக்கு இன்று காலை தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
பெஹ்ரம் கான், ஷாஹித் ஹனீஃப், முகமது தல்ஹா, கலீல் அகமது, சுல்ஃபித்கர் அலி, முஸ்தக் அகமது மற்றும் நாவாஷ் அலி ஆகியோர் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தீவிரவாதிகள்.
கடந்த மாதம் டிசம்பர் மாதம் முதல் மொத்தம் 17 தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தானில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications