"கடவுளின் குழந்தைகளுக்கு" 20 லட்ச ரூபாய் நன்கொடை- அசத்திய அப்ரிடி!

Subscribe to Oneindia Tamil

கராச்சி: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாஹித் அப்ரிடி மன நலம் குன்றிய குழந்தைகளுக்கு 20 லட்ச ரூபாய் பணத்தினை நிதியுதவியாக அளித்துள்ளார்.

பாகிஸ்தானின் நட்சத்திர வீரரான சாதனையாளர் அப்ரிடி பல நல்ல காரியங்களுக்கு தொடர்ந்து நிதியுதவி அளித்து வருகிறார். கிராமங்களுக்கு சாலை போடுவது, புற்றுநோய் மருத்துவமனை கட்டுவது போன்ற அறப்பணிகளில் அப்ரிடி ஈடுபட்டு வருகிறார்.

Shahid afridi donates 20 lakhs to special children

இந்த நிலையில், கராச்சி நகரில் செயல்பட்டு வரும் உடல் மற்றும் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான "தாருல் சுகான்" என்ற அமைப்புக்கு நேற்று அப்ரிடி சென்றார்.

அங்கு மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுடன் சிறிது நேரம் செலவிட்ட அப்ரிடி, அவர்களின் தேவைகளை கேட்டறிந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளுடன் பேசியும் மகிழ்ந்தார்.

பின்னர் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளின் நலனுக்காக 20 லட்சம் பாகிஸ்தான் பணத்தையும் நிதியுதவியாக அப்ரிடி அளித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+