அலை சறுக்கில் விளையாடியவரின் காலை கடித்த ராட்சத சுறா....!
பெர்த்: ஆஸ்திரேலியாவில் கடல் அலை சறுக்கில் விளையாடிவர் ஒருவரின் காலை ராட்சத சுறா ஒன்று கடித்தது. இதில் அந்த நபரின் கால் துண்டானது.
ஆஸ்திரேலியாவில் பெர்த் அருகே உள்ள பால்கன் கடலில் நேற்று முன்தினம் பென் ஜேரிங் (29) என்பவர் கடல் அலை சறுக்கில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். பார்கன் கடல் பகுதியானது ராட்சத சுறாக்கள் நடமாடும் இடமாகும். அப்போது அங்கு வந்த ராட்சத சுறா ஒன்று அவரது காலை கடித்துள்ளது.
சுறா மீன் அவரது முழங்காலுக்கு கீழே கடித்ததால் அவரது கால் துண்டானது. அங்கு இருந்தவர்கள் பென் ஜேரிங்கை பத்திரமாக கடற்கரைக்கு கொண்டு வந்துள்ளனர். இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவத்தையடுத்து, அந்த கடல் பகுதியில் இருந்து 15 அடி நீளமுள்ள வெள்ளை சுறா ஒன்றை அந்நாட்டு அதிகாரிகள் கொன்றனர். பென் ஜேரிங் அலை சறுக்கில் செல்ல பயன்படுத்தும் அந்த போர்டானது, சுறா கடித்ததில் உடைந்துவிட்டது. அவருடன் அலை சறுக்கில் ஈடுபட்டவர்கள் அதை கண்டெடுத்துள்ளனர்.