சிரிக்க மறுத்த 18 மாத குழந்தையை 25வது மாடியில் இருந்து தூக்கி வீசிய 10 வயது சிறுமி
பெய்ஜிங்: சிரிக்க மறுத்த குழந்தையை 10 வயது சிறுமி ஒருத்தி 25வது மாடியில் இருந்து தூக்கி வீசிய அதிர்ச்சிச் சம்பவம் ஒன்று சீனாவில் நடந்துள்ளது.
சீனாவின் சொங்குயிங் நகரில் உள்ள 25 அடுக்கு மாடி கட்டிடத்தின் கடைசி மாடியில் உள்ளது சம்பந்தப்பட்ட 10வயது சிறுமியின் வீடு. சம்பவத்தன்ரு பள்லியில் இருந்து வீடு திரும்பிய சிறுமி, பால்கனியில் 18 மாத ஆண் குழந்தை விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்டாள்.
ஆசையாக குழந்தையைப் பார்த்து சிறுமி சிரிக்க, பதிலுக்கு அக்குழந்தை சிரிக்கவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த அச்சிறுமி, கோபத்தோடு குழந்தையை தூக்கி 25வது மாடியில் இருந்து கீழே வீசியுள்ளாள்.
ஆனால், அதிர்ஷ்டவசமாக தரையில் வந்து விழுந்த அக்குழந்தை காயங்களுடன் உயிர் பிழைத்துக் கொண்டது. படுகாயமடைந்த அக்குழந்தைக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது.
நடந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் காட்சிகளாக பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications