தொலைக்காட்சி லைவ் நிகழ்ச்சியில் பெண் நிருபரிடம் பாலியல் சீண்டல்.. வாலிபர்களுக்கு வலைவீச்சு
பெர்லின்: லைவ் நிகழ்ச்சியொன்றில் பெண் நிருபரிடம் அத்துமீறி நடந்துகொண்ட வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் ஜெர்மனியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜெர்மன் நாட்டின் கலோங் நகரில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஆயிரக்ணக்கான பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளானார்கள். கலோங் நகரில் ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் நடைபெறும் திருவிழா தொடர்பான நேரடி தகவல்களை தொலைக்காட்சி பெண் நிருபர் லாபை என்பவர் நேற்று தெரிவித்து கொண்டிருந்தார்.

அப்போது, புத்தாண்டு தினத்தில் போது அகதிகளால் எவ்வாறு பாலியல் வன்முறைகள் அரங்கேறியது என்பது தொடர்பாக அவர் மைக்கை பிடித்து காமிரா முன்பாக நின்று கூறிக்கொண்டிருந்தபோது பின் பக்கமாக வந்த ஒருவர் அவரிடம் அத்துமீறியுள்ளார். இது நேரடியாக ஒளிபரப்பானது.
இதைப்பார்த்த பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்து வருவதற்குள் சில்மிஷ நபர் தப்பியோடிவிட்டார்.
பாலியல் தொல்லை அளித்த நபரையும் அவரது நண்பரையும் தற்போது போலீசார் தேடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக பெண் நிருபர் கூறியதாவது: அப்பகுதியில் நான் பணி செய்தபோது என்னை பார்த்து பல ஆண்கள், நடு விரலை ஆபாசமாக காட்டினர். நான் மைக்கில் பேசியபோது என் பின்னால் வந்த நபர், இன்று இரவு படுக்கையை ஷேர் செய்ய வருகிறாயா.. என்று காதில் கிசுகிசுத்தார்.
அதை கண்டுகொள்ளாமல், நான் பேசிக்கொண்டிருந்தபோது, எனது பின்புறத்தில் நின்றுகொண்டு உடலுறவு செய்வதை போல உடலை முன்னும் பின்னும் அவரது உடலை இழுத்து ஆபாச சைகை செய்தார். இதன்பிறகு, ஒருபடி மேலே போய், எனது மார்பகங்களை பின்னால் இருந்து பிடித்து அழுத்தினார்.
இதனால் நான் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானேன். பாதுகாப்பு வீரர்கள் வந்ததும், அந்த நபர் ஓடிப்போனார். இவ்வாறு அந்த பெண் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications