வெடிகுண்டு வைத்திருப்பதாக விளையாட்டாக கூறிய சீக்கிய சிறுவன் கைது! அமெரிக்காவில் அத்துமீறல்
வாஷிங்டன்: தனது பையில் வெடிகுண்டு இருப்பதாகவும், பள்ளியை வெடித்து சிதற வைத்துவிடுவேன் என்றும் நண்பர்களிடம் விளையாடி பேசி சிரித்த அமெரிக்கவாழ், சீக்கிய சிறுவனை போலீஸார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள அர்லிங்டன் நிகோலஷ் என்ற பள்ளியில் அர்மான்சிங் சராய்(12) என்ற சிறுவன் படித்து வருகிறான்.
வகுப்பறையில் சில நாட்களுக்கு முன்பு சக மாணவர்களுடன் சராய் பேசிக் கொண்டிருந்தபோது வெடிகுண்டு பற்றி பேச்சு வந்துள்ளது.
Here's some more insight on the case, thank you to all those helping spread the word & raising awareness #sikhlivesmatter #justiceforarmaan
Posted by Ginee Haer on Thursday, December 17, 2015
காமிக்ஸ், வீடியோ கேம்ஸ் போன்றவற்றில் வெடிகுண்டுகள் பற்றிய பரிட்சையம் சிறுவர்களுக்கு இருந்ததால் உன்மீது நான் குண்டு போடுவேன் ஒன்று ஒரு மாணவனும், அதை கையால் பிடித்து உன்மீது வீசிவிடுவேன் என்று மற்றொரு மாணவனும் என மாறி மாறி பேசி சிரித்துக்கொண்டிருந்தனர்.
அப்போது, சராய் 'என் பையில் உள்ள வெடிகுண்டை கொண்டு இந்தப் பள்ளியை தகர்க்கப் போகிறேன். அப்போ என்ன பண்ணுவீங்க' என்று கூறி விளையாட்டாக சக தோழர்களை மிரட்டியுள்ளான்.
சிறுவன் கூறியதை தனது ஃபேஸ்புக் நிலைப்பதிவில் வெளியிட்டுள்ளார் ஒன்றுவிட்ட சகோதரியான கினீ ஹயிர். இது பிரின்சிபால் கவனத்திற்கு சென்றதால், உடனடியாக விசாரணை ஏதுமின்றி போலீசை கூப்பிட்டு அர்மான்சிங் பற்றி அவர் புகார் தெரிவித்துள்ளார். போலீசார் மாணவனை கைது செய்து சிறார் சிறையில் அடைத்துள்ளனர்.
அர்மான்சிங்கின் அண்ணன் ஆக்ஸ்சிங் கூறுகையில், வகுப்பில் அனைத்து மாணவர்களும் வெடிகுண்டு குறித்து 'ஜோக்' அடித்து பேசினர். ஆனால் சீக்கிய சிறுவனை மட்டும் கைது செய்தது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.
டெக்சாஸில் பள்ளியில் மாணவன் அகமது முகமது தயாரித்த கடிகாரத்தை வெடிகுண்டு என தவறாக கருதி அவரை போலீஸார் கைது செய்தது நினைவிருக்கலாம்.